Thursday, April 26, 2012

sometimes we are stunned by ' beauties ';
oh , she is such a beauty-
a simple beauty, an unadorned charm !
alas , she herself quite unaware
of her innocence in blissful radiance ;
she is not wealthy ,a poor
but rich in beauty's excellence !
everything about her professes dignity
and anything she does is gentle in grace
and does possess a natural poise ;
she seems to speak yet not;
o ,her beauty speaks in whispers with the wind :
your age does not decline the treat of her beauty ;
it spreads on her like the unshaken shadow
on the still waters of a limpid lake-
her beauty manures not vulgar vultures of the mind
but transforms you as an ardent devotee of beauty !
o how could it be she the mother of two grown kids
that garland their arms around her lovely neck !
her fair skin seems quite strange for her social status
and radiates a divine glow about her ;
those artificially shaped girls in skimpy dress
down the ramps in ugly gaits in blinding lights
and those in wealthy overflowing dresses
in knife-sharp creases and in boastful jewellery
are no match to this lady wrapped in local attire sans ornaments ;
whose one-quarter smile would land us in heavens of bliss !
who is the lucky soul to have her as his dear wife ?
who is the mother that nurtured her in her womb ?
o god , let she not age nor her beauty tire and wither
for she is the walking paradise of virtuous beauty ;
a creation of you when you were in total peace !
----sundaram chandrakalaadhar

Monday, April 23, 2012

மற்றும் ஓர் வசந்த மாலை நேரம் .
மூன்றாம் தளத்தின் வெட்ட வெளி .
இதமான தென்றல் பதமாக வீசுகிறது.
வானின் கவிழ்ந்த நீலக் கோப்பையில் துல்லிய வெண் மேகங்கள் கொலுபொம்மைகள்போல்.
மேற்கு வெள்ளிக் கூரைகளை அகற்றித் தங்கத் தகடுகளை வேய்ந்து கொண்டு இருக்கிறது .
' தியானம் செய் ,தியானம் செய் ' என்று என்னுள் ஏதோ தூண்டுகிறது .
என் நடை நிறுத்தி ஓர் புள்ளியில் சிலையாகிக் கண்கள் மெல்ல மூடுகிறேன் .
காற்றின் துள்ளலும் ஆனந்தமும் என்னைச் சிலிர்க்க வைக்கின்றன .
என் ஆடைகள் காற்றின் கைபிடித்து குத்தாட்டம் போடுகின்றன .
என் நெஞ்சின் மீது ஒன்றன்மேல் ஒன்றாக உள்ளங்கைகளை விரித்துப் படர விடுகிறேன் .
என் உட்பார்வை என் கபாலம் துளைத்து விண்ணுள் பயணிக்கிறது .
கடவுளை , அந்த மகாசக்தியை ,அந்தப் பேரமைதியை ,கருணை வடிவைத் தேடி அலைகிறது.
காண இயலாது தவிக்கிறது .
உள்வாங்குகிறது .
வெளிப் பயணம் செய்வதேன் , முட்டாளே ! உன்னுள் உள்ளவனைக் காண உட் பயணம்தானே தேவை ; அடிக்கடி அறிவுறுத்தப்படுவது மறுபடி செவியில் பறை அறைகிறது .
ஆனால் ,அழுக்கு நிறைந்த என்னுள்ளா அச்சக்தி இருக்கக் கூடும் ?
முடியாது என்று மனம் அடித்துச் சொல்கிறது .
மறுபடி விண் பயணிப்பு .
எதற்கு ?
என்னையே நம்பி இருக்கும் ஓர் உயிர் தனியே மனச் சிக்கலில் எங்கோ தவிக்கிறது .
அந்த உயிர் அமைதியும் நலமும் உற்சாகமும் பெறவேண்டும் .
அதுவும் இன்றே , இப்பொழுதே .
அந்த உயிரின்  நிழலே எங்கள் மகிழ்ச்சி .
நெடிய பெருமூச்சு உயிர்க்கிறேன்.
அந்த மகா சக்தியை நெருங்கி விட்டதுபோல் ஓர் உணர்வு ; அதுவேகூடப் போதுமானது.
என்னை நிசப்தமாக்குகிறேன்.
சிறு ஒலியும் பெரிதாகக் கேட்கிற நிலை .
ஓ , மாசக்தியே ,எல்லாம் வல்ல தாயே ,அந்த உயிரைக் காப்பாற்று ; அமைதியும் வலிவும் அழகும் உற்சாகமும் அதற்கு அருள் .
திரும்பத் திரும்ப இதை ஒன்றையே மனம் கனிந்து, நெகிழ்ந்து , கரைந்து , தாழ்ந்து ,பணிந்து ,மெலிதாய் ,உரக்க என்று பல வடிவுகளில் பாதங்களில் வைக்கிறது.
மாசக்தியே ,அவ்வுயிர்பால் உன் விழி திருப்பி கருணை இறக்கு.
சிலநிமிடங்கள் .
மனம் சற்று அமைதி கொள்வதாய்த் தெரிகிறது.
விழி பூக்கிறேன்.
மேற்கில் பொன் ஆற்றில் சூரியப் பூ பெரிதாகி வேறு திசையில் முகம் திருப்பிக் கொள்கிறது .
என்னைப் போலவே பறவைகளும் மௌனமாய் ;
என் வளை என்னைக் கூப்பிடுகிறது ;
மற்றொரு வசந்த மாலையிடம் விடை பெறுகிறேன் .
---சந்திர கலாதர் [ 23. 04. 2012 / திங்கள் /சித்திரை 11 ]

Wednesday, April 18, 2012

கடவுளே !
எனை இந்தப் புவிக்குள் அனுப்பி வைத்தாயே -
எனை வாழ்விக்கவா ?
அன்றித் தண்டிக்கவா ?
முன்னது என் கையில் எனினும்
பின்னது உன் கையில் அல்லவா?
அது முடிந்ததா ? இன்னும் தொடருமா ?
தட்டு நிறையக் கசப்பைக் கொட்டும் நீ
தித்திப்பை மட்டும் சொட்டுகிறாய் ;
அடிக்கடி என் மண்டையிலும் குட்டுகிறாய்-
சந்தோஷம் ஒன்று வந்துவிட்டால்
சவுக்கடி நான்கும் தொடர்கிறதே !
கண்ணீர்க் குளத்தின் நடுவிலேதான்
சிறு மகிழ்வு பூத்திடல் விதியாமோ ?
எனக்குள் புகுந்து இயக்குவோனே !
ஜதிகள் சுத்தமாய் ஆடினேனா ?
அடவுகள் சரியாய்ப் பிடித்தேனா ?
என் பாதையில் தடங்கள் பதித்தேனா ?
சிலரது நினைவில் நிற்பேனா ?
மறந்த கனவாய்ப் போவேனா ?
தினமும் என் விரலினை உயிர்க்கின்றாய்
' சாவிப் பலகையில் ' துள்ள வைக்கின்றாய் ;[ keyboard]
என்னை அதன் வழி கொட்டுகிறேன்
சிலரது நெஞ்சை அடைகின்றேன் ;
இதனில் நிறைவு காண்கின்றேன் .
--------சந்திர கலாதர்
இந்த நோயை மட்டும் எவரும் ஏற்பதே இல்லை ;
தனக்கு இல்லாத நோயைப் பிறரிடம் கதைத்து
அனுதாபம் பெறத் துடிப்போர் கூட
மன நோயினை மட்டும் அறவே மறுப்பர்-
' உனக்குத்தான் மனநோய் , மருந்தை நீயே சாப்பிடு '
இது படித்தவர் படிக்காதோர் வேறுபாடின்றி
சிக்கித் தவிப்பவர்தம் தவறாத கூற்று;
இவர்களின் நிலைமை பரிதாபம் எனிலோ
நமது நடத்தையோ  அவர்க்கு புரியாத புதிர் !
ஒரு சின்னக் குழந்தையும் மோப்பம் பிடித்திடும்
தன் பார்வையாலேயே அளவும் எடுத்திடும் ;
சமூகத்தின் நாக்கு நாராசமாய்ச் சுழலும்
தன் பெயரையே கூட அவ்வில்லம் இழக்கும் ;
பெற்றோர் தினமும் நலிந்து சாவார்
எதிர் காலம் எண்ணித்  தவியாய்த் தவிப்பர் ;
வளர்ந்தும் குழந்தையாய்ச்  செய்வது அறியாது
ஏளன இலக்காய் வாழும் இவர்களை
பண்புடன் போற்றும் மையங்கள் வாழ்கவே !
------சந்திர கலாதர்
' காசு பெறாதவை பற்றியே எழுதுகிறாயே -
உயர்ந்த தத்துவங்கள் கைப்படவில்லையா ? '--
எல்லோரது சலிப்பும் விழி சுருக்கலும்
மேற்போக்கான படித்தலும் ஒதுக்கலும் அறிகிறேன் ;
மரங்கள் ,மலைகள் ,வானம் ,கடல் இவைகள்
உயர்ந்தவைதானே ; உன்னதங்கள் தானே !
அற்ப நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கினால்
முகிழ்ப்பது மெல்லிய மகிழ்வுகள் அல்லவா !
ஓர் தென்னை தன் கனவில் மெலிதாய் அசைவதும்
கீற்று வளைவில் சிறு பறவை மௌனம் ரசிப்பதும்
காகக் கூட்டம் மாலைப்பொழுதில் கூடிக் கரைவதும்
காற்றின் குறும்புக் கிள்ளலில் கிளைகள் வெட்கி நெளிதலும்
பெண்கள் ஒருவருக்கொருவர் கூந்தல் கூட்டலும்
குழந்தைகள் மணலில் புரட்டும் மொழிகளும்
அற்பமாய்ப் பார்க்கும் எருமையின் சிந்தையும்
ஒற்றைச் சிந்தையாய் ஓடித் திரியும் எறும்பு வரிசையும்
இன்னும் எண்ணிலா அற்பங்கள் அனைத்துமே
என்னுள் ஈடிலா ஆனந்தம் விதைப்பன;
சிந்தைக்குள் கோடிக் கற்பனை தெறிப்பன;
என்னைப்போலே எங்கோ ஒருவன் ரசித்து மகிழ்வான் ;
அவனுக்கும் எனக்குமாய் எழுதி நிறைகிறேன் !
---சந்திர கலாதர்

Tuesday, April 17, 2012

சூரியனே !
இது வசந்த காலம் !
கனவுகள் கைகோர்க்கும் காலம் அல்லவா ?
காலைகள் ஏன் பூத்ததும் வதங்கிப் போகின்றன ?
சற்று மென்மை கூட்டி மேன்மை சேர்க்கலாகாதா ?
எத்தகைய ' வில்லத்தனச் ' சிரிப்புகளும் இல்லாது
மௌனமாய்ச் ' சவுக்கடி' த்து
மேனியில் ஏன் சிவப்பு ' சிற்றாறு 'களை வரைகிறாய் ;
உப்பு நதிகளை உயிர்ப்பிக்கிறாய் , சொல் ?
இளங்காற்றைக் கொன்று போடுகிறாய் ?
காற்றில்லாக் காலை கழுத்தை நெரிக்கிறதே !
சுவர் நிழலில் தஞ்சம் புகினும்
வான் ஏறி நிழல் தின்று எனைக் கடிக்கிறாயே !
போ , வசந்த கால மாலைக்கே என் ' வாக்கு ' !
------சந்திர கலாதர்

Sunday, April 15, 2012

இறைவா...ஆ..ஆ..ஆ !
உன் காது செவிடானால் இப்போதாவது கேட்கிறதா ?
அவளைப் பேசச் சொல்;
என்னால் முடியவில்லை-
உன்னால் முடியுமா சர்வ வல்லமையாளனே ?
இறைவா !
நீ எங்கும் இருப்பவனாம் ;
அதனால் கிசுகிசுக்கிறேன்;
அவளைப் பேசச் சொல் !
இன்னும் எத்தனை நாட்கள் மௌனம் மோகிப்பாள் ?
மௌனம் கொல்லுமோ ?
கொல்லும் கொல்லும்தான் -
பாவம் ,அவள் தன்னிலை அறியாதவள் ;
அவளுக்கென்றே மாறாத உலகம் ;
அவள் விழிகளை உள்வாங்கிய உலகம் --
இந்த வண்ண பூமிக்கு அழைத்து வா !
விழி வண்டுகளை மண்ணின் வியப்புகளில் சுழலச் செய்.
வயிற்றின் பசி காட்டு ;
ருசியின் வழி சொல்லு.
நின்ற காலத்தை முடுக்கிவிடு ;
எதிர் காலத்தை இழுத்து முன் நிறுத்து -
ஆம் , அவள் வேண்டும் ;
மறுபடி வாழ வேண்டும் .
----சந்திர கலாதர்

Saturday, April 14, 2012

பால் காய்ச்சி இருக்கிறீர்களா ?
அது பொங்கி எழும் சற்றுமுன் ஒரு ஆடை தரித்துக் கொள்ளுமே ,சற்று மங்கலாய் -
அதேபோல் ,மேற்கே ஆதவன் அமிழும் முன்பு அதன் வட்ட ஒளி வதனத்தில் அதைவிடச் சற்று சிறிய பழுப்புத் தகடு பாய்ந்து கொள்கிறது; ஆனால் இத்தகடு சூரிய விளிம்புக்குள் விடாது இங்கும் அங்குமாய் முட்டி மோதிக் கொண்டே இருக்கிறது.
அதுபோது சூரியனின் ' பளீர் ' கீற்றுப் பிறை கண்ணில் பாய்கிறது .
இந்த அற்புத ஒளி நர்த்தனத்தை , நண்பர்களே ,யாராவது கண்டு உண்டு களித்திருக்கிறீர்களா ?
வசந்தகால அந்திவேளைகளின் சிறப்பே ஆதவன் ' அமிழ் தோற்றமும் ' இளம் தென்றலின்
உல்லாச ஊர்வலமும் தானே !
அந்தி மாலைகளில் தொடுவானம் பொற்புகை போட்டுக் கொள்ளும் அழகே அழகு !
ஆங்கிலத்தில் நாம் ' golden haze ' என்று குறிப்பிடலாம் .
இம்மாலை உயர்வானம் அலையிலா நீலக்கடலே தான் !
வெள்ளி ஓடங்களாய் எண்ணிறந்த வெண்மேகங்கள் !
வானம் தினமும் , ' என்னைப் பற்றி என்ன எழுதினாய் ? ' என்று கேட்பதுடன் ' இன்று இதோ உனக்காக ! ' என்றல்லவா அமுதக் கிண்ணத்தை அன்போடு அப்படியே என் வாய்க்குள் மெல்லக் கவிழ்க்கிறது .
-----சந்திர கலாதர்
[சனிக்கிழமை ,மாலை 6 மணி / 14.04.2012 / 2, சித்திரை

Friday, April 13, 2012

காலைக் கதிரவன் கனிவு இழக்கும் நொடிகளும்
மாலைச் சூரியன் கனிவு கனியும் காலமும்
இரண்டுமே எனக்கு முக்கியம் ;
முன்னது விரட்ட என்னையும் காற்றையும்
பின்னதோ காற்றோடு அன்பில் அணைக்கும் .
----சந்திர கலாதர்

for how long...?

" for how long are you going to be like this ?"-
all and sundry have shot the very same question at me--
at times merciless ,at times full of concern
which has no answer from me ever--
"o mother,why you alone do not ?
is it that i am never bothersome to you ?"--
yes , i know , mother your heart bleeds as tears ;
what can i do , dear mother ?
am i not a mentally unstable creation of god ?
 
 
----s.chandrakalaadhar

Wednesday, April 11, 2012

வசந்தத் துள்ளல்
&
வசந்தத்தின் துள்ளலாய் தென்காற்றின் நர்த்தனம்
மாலைப்பொழுதின் மயக்கும் மேடையில் --
காதுள் நிறைத்து கன்னத்தில் தடவி
அவசர கதியில் ' பர பர'க் காற்று -
செல்லும் வழியில் சொல்லும் சேதியில்
மரங்களின் வாய்களில் குதித்தெழும் சிரிப்பு-
உடல் குலுங்கக் குலுங்க மரமே சிரிப்பாய் !
வசந்தம் வந்திட என் கழுத்தே வலிக்கும்
மரத்துள் புதைந்து கூவும் குயிலைத் தேடி-
கண்ணைச் சிறுக்கி இலைதழை செருகி
சிறு அசைவு தேடலில் மௌனம் காத்து
அலுத்துத் திரும்பிட அந்நொடி கத்தும்
'குஹூக் குஹூக் ' என குபுக் குபுக் குமிழாய்-
சித்திரை வருகுது திருவிழா துவங்குது
மாலைக் காற்றுள் மக்களை அழைக்குது
காலை கடுமைக்கு மாலை மருந்தாய் !
------சந்திர கலாதர்

Monday, April 9, 2012

a tribute to a holy river by its rivulet
&
dear father,
you would have completed 112 years today had you been alive ;
10.04. 1900 is your birth date
and you departed us in 1994 at a ripe age ;
o yogi, your memories would never fade in our hearts ;
we salute you again and again for your straightforwardness in all your dealings;
you had been a great teacher to us both in school and in home;
how can we forget your lion's strides as you made to school and back;
we don't remember a day you missed your daily yoga at pre-dawn hours
till you reached your seventies and stood as a shining example for us to tread ;
you talked less, prayed more and meditated most and taught exhaustively ;
you stood for depth and breadth in studies and science was your forte ;
as an exemplary teacher you never hurried through lessons nor feared inspections ;
all students loved your class as you did not move to next till all understood a point.
the definitions and theorems still ring in our ears with unbroken edges as you taught long long ago .
we never wasted holidays in vain talk and boisterous play but learnt to write essays ;
it doesn't mean we were prisoners of the house but played while it was to be played.
the mantras and slokams of your daily worship still haunt our ears and play on our lips ;
once you told us all ," o my boys , i am not leaving you a wealth of properties and gold;
but left you all with an abundant wealth of good education and conduct to steer your paths "--
father , you strode in front in unwavering discipline and we followed in your guiding light ;
we are proud to be your sons and daughters and we pray our future births in your shade;
we still feel your benign presence in our midst and our heads touch your feet in reverence true.
------s.chandra kalaadhar

Sunday, April 8, 2012

ஒரு அனுபவம்
&
பௌர்ணமி நாளன்று சரியாக ஆதவன் மறையும் வேளை
கிழக்கே பால்நிலவு நிறைவாய் எழும்--.
காலையில் சூரியன் எம்மூலையில் முளைத்தானோ
அதே புள்ளியில் விழிகளைப் பாய்ச்சிக் காத்திருக்கிறேன்;
சந்திர மலர்வை அதே நொடியில் கண்டு களித்தாக வேண்டும்-
மாலை ஆறைத் தாண்டி விட்டதே ; ஏன் ? ஏன் ?
மனம் தவிக்கிறது ; மேகக் கோட்டைகளும் இல்லையே ?
ஏமாற்றத்தில் ,தொலைத்த குழந்தையைத் தேடும் பாசத் தாய்போல் பரிதவித்து ,
தலை திருப்புகிறேன் கிழக்கையே அலச -
அட ,சற்றுத் தென்புறமாய், பூத்துப் பத்து நிமிஷங்கள் ஆனதால் ,
வானில் தவழ்ந்து ஏறி ,அட்டகாசமாய் எனைப் பார்த்துச் சிரிக்கிறது .
என் கணக்கு தவறானது ;
சித்திரா பௌர்ணமி அன்று உனை ஒரு கை பார்த்துக் கொள்கிறேன் என்று
எனக்குள் சொல்லிக் கொள்கிறேன் .
&
நிலவு , அதுவும் , முழு நிலவு , அதுவும் வசந்தகாலப் பூ நிலவு --
எவ்வளவு அழகாக இருக்கிறது !
அழகு என்ற வார்த்தையே நிலவைக் குறிக்கப் பிறந்ததுதானோ ?
அழகு எனும் சொல்லே நிலவில் வழிந்த அமுதோ ?
அழகிற்கு எத்தனை வேறு சொற்கள் இருப்பினும்
அழகு எனும் இதனை அழகால் வெல்ல வேறு சொல் உண்டோ ?
மற்ற சொற்கள் கவிஞர்களால் தேடி அலையப்படுவது ;
சாதாரணர்களின் பழகு வார்த்தை அழகுதானே !
நிலவே , உன்னை நிலா என்றாலும் தித்திக்கிறது !
இரவில் மிதக்கும் இனிப்பே !
எத்தனை யுகங்களாய் காதலின் ஊற்றாய் நீ பெருகி இருக்கிறாய் !
காதல் உன் மடியில் தலை சாய்த்துக் கனவுள் கலந்தது ;
இரவுகள் மாயாபுரிகளாய் குளிர் நடம் புரிந்தன --
உழைப்பில் தேய் ! ஒளியில் மிளிர்வாய் !-
என்று சொல்லாமல் சொல்கிறாய்-
காதலின் வரலாறே உன்னில் அடக்கம் !
&
இன்று மாலை ஐந்து மணி --
மேற்கே சுடும் ஒளித் திரவமாய் கொட்டிக் கிடக்கிறது ;
கொதிக்குழம்பை யார் மெல்ல மெல்ல அள்ளிச் சூரிய பாத்திரத்திற்குள் நிரப்புவது ?
கைப்பிடிப்பாய் செங்கதிர் உருண்டை ஆக்குவது ?
கசியும் கதிர்களைத் துடைத்து ஆரஞ்சைப் பூசுவது ?
அப்பளம் இடுவதுபோல் தட்டையாய் பெரிதாக்குவது ?
தொடுவானச் சட்டியுள் பொரிப்பது ?
பின் ஆசையாய் விழுங்குவது ?
&
வசந்த காலம் மொட்டவிழ்க்கிறது -
வசந்தம் என்றாலே மாலைத் துள்ளல்தானே !
கொடிகளில் துணிகள், கோபுரக் கொடிகள் ,மரக் கொத்துகள் ,அணியும் ஆடைகள்
எல்லாம் உல்லாசமாக ஆட்டம் போடுகின்றன
காய்ந்த சுள்ளிகள்போல் தோன்றும் மரக் கிளைகளின் பட்டைகளின்
ஒவ்வொரு நுண்ணிய துளைகளில் எல்லாம் பச்சை ஒளிப்பொறி ;
ஆம், பிஞ்சு இலைத் துளிர்கள் !
மரப்பட்டைக்குள் இத்தனை உயிரோட்டமா இவ்வெரிக்கும் வெயிலில் ...வியக்கிறேன் !
வசந்த மாலை நேரங்கள் சொர்க்கமே !
&
-----சந்திர கலாதர்
08.04..2012 / ஞாயிறு /மாலை 6 மணி

Sunday, April 1, 2012

at the immense seashore
&
at the immense seashore,
boasting of frozen wavelets of silvery sands
i stand as a small insignificant pin
under the huge canopy of the sky,
facing waves on waves of the magical blue
advancing and crashing on shore front
generating a variety of sounds-
a hiss, a clap ,a thud ,a thunder !
something definitely happens here ;
mind grows curious to get into the vortex
and fish out the eternal truth-
it dawns on me a picture
of a parent holding the tiny hand of a cute child-
the child full of questions
firing them in quick succession
barely before the answers fully bloom-
restless questions,eternal doubts
one query leading to another
drawing out the entire mystery of nature;
a single question seed
exploding into the 'tree of universe '--
endless doubts and endless queries of baby waves
riding on the backs of huge parent waves
and the perennial patient answers of parent waves-
this world reverberates with endless searching questions
journeying in ethereal space ,seeking answers from the creator
who has packed them tightly inside the ' Q '!
s.chandrakalaadhar