Tuesday, December 11, 2012

கவிதைப் புயல் பாரதி

&

அன்று --
குண்டும் குழியுமாய்
முட்டி மோத வைத்த
தமிழ்ச் சாலையிலே
இவன் --
தீயினைத் தேராக்கி
விழியினை வில்லாக்கி
மின்னலை அம்பாக்கி
இடிகளைச் சொல்லாக்கி
புரட்சி மழையாய்
மடமை இடிக்க வந்தான் !
அடிமைக் குடிமையை
அடியோடு தகர்த்திட
ஆவேசம் கொண்டு
இவன் --
கவிதைப் புயலானான் !

ஆனால் --
இயற்கை தொட்டதும்
இறக்கை விரித்துப்
பூக்கோலம் பூண்டு
தென்றலாய்த் திரிந்திருந்தான் !
குழந்தை முத்தமாய்
தமிழ்ச் சொற்களால்
தழுவி அணைத்திடுவான் !

இவன் ஒருவன்தான் --
நாக்கோடு நெஞ்சையும்
நடையோடு உதட்டையும்
இணைத்துப் பிடித்த
பித்தன் என்றானான் !

அவன்தான் --
பாரதி !
பா ரதி!
பார் அதி 

பாரதி !
இவன் பாக்களோ
அழகு ரதி !

இவன் நெஞ்சிற் சுமந்ததோ
தீ !

இவன் பாடினால்
பார் அதிரும் !

இவனைப்
' பார் அதி 'நேரம் எனக்
கெஞ்சும் நம் விழி !

----சந்திர கலாதர்.
' ப்ரிய ரூபங்கள் '1993
என் கவிதைத் தொகுப்பில் 

Friday, December 7, 2012

i lazily turn the pages -
 
it is the concise English dictionary ;
 
the last page says "550 sir ! " in mini voice ;
 
i make a measure of me -
 
would i have garnered words worth
 
at least 50 pages' space
 
in all these 50 years
 
of my international-marriage
 
to this bride from foreign shores ?
 
strongly doubt even this humble measure !
 
do i know the full depth and width and confident ride
 
of each word within this beggarly ambit ?
 
again a giant 'no ' with a drooping head !
 
what courage then have i
 
to express my thoughts --
 
that bloom with all fluorescence and fragrance
 
in the poetic gardens of my native tongue --
 
in this poorly acquired overseas skill ?
 
yet i do ,hoping some forbearing souls
 
beyond the roaring seas and mighty mountains
 
would tune their sensitive ears
 
to the central throbs of this heaving heart !
 
 
 
----s.chandra kalaadhar
 

Sunday, December 2, 2012

as none other will listen me in silence

god ! whoever or whatever may you be
make my life simple
thoughts noble
speech striving towards truth
heart rushing to help the needy
head neither bloated nor depressed
mind never treating another
inferior or bankrupt of talent--
a resolve to walk alone
the path of righteousness against odds
a desire not exceeding my needs
a belief just capable of consoling my grief
and putting me back on life's unending stream !
god, i know i come to you with tears and pains
not in the hope i will see light
but to unburden my heart of my grief
as none other will listen me in total silence.

---s.chandra kalaadhar.
02.12. 2012 / sunday
 

Monday, November 19, 2012

 
ஒரு முதிய மரம் அலுத்துக் கொண்டது --
 
" வயசாகிப் போச்சு
 
வெயில் மழை காத்து எதுவும் தாங்க முடியல
 
மூட்டுக்கு மூட்டு ,கிளைக்குக் கிளை வலிக்குது
 
பறவைகளைச் சுமக்கிறது கூடச் சிரமமா இருக்கு
 
அப்பறம் எங்கே காய் கனி சுமக்கறது ?
 
அடிபடறது போ ?
 
காலேல தல விரிக்கறதுக்கே சோம்பலா இருக்கு
 
பாரு தலைவேற நரைச்சுப் போச்சு
 
கொட்டியும் போச்சு
 
பிள்ளைகுட்டின்னு சுத்தி எத்தனை இருந்து என்ன சொல்ல ?
 
ஏதும் சீந்தறது இல்ல..
 
ஒரு புயல் வந்தாப் பரவால்ல போலருக்கு
 
அப்பாடான்னு பெருசா ஒரு கூச்சல் போட்டு விழுந்துடலாம் போலருக்கு.
 
பாத்ததெல்லாம் போதும் சாமி
 
என்னிக்கு என் கணக்கு முடிப்பானோ ..தெரியலையே
 
என்ன சொல்லி என்ன ?
 
தற்கொலை பண்ணிக்கலாம்னு விழப் போனாலும்
 
இந்த மண்ணுக்குள்ளேந்து ஆச வேர் விடமாட்டேங்குது
 
உஸ் ..உஸ்ஸ் ..உஸ்ஸ் ! "
 
 
பக்கத்து இளைய மரம் -
 
 
" ஏன் பெருசு இத்தனை அலுப்பு ?
 
உன் வயசுக்கு நல்லாத்தான இருக்க ..! " என்றது
 
 
 
பெருசுக்கு இப்போ பாராட்டுல இளமை திரும்பிடுச்சி
 
 
" போடா போக்கத்த பயலே
 
உன் வயசுலே எந்தக் காத்துக்கும் அசரமாட்டேன்
 
உடம்பையே வில்லா வளைப்பேன்
 
தரைய உச்சாணிக் கொப்பால முத்தம் குடுத்து
 
அம்பா மேல வருவேன்
 
புயலு கூட அப்பால மருவாதையா ஒதுங்கிப் போகும்
 
உடம்பெல்லாமே பூவா , காயா ,கனியா
 
தேனடை மாதிரித் தொங்கும்
 
பசங்க கல்லைத் தூக்கறதுக்கு முன்னயே
 
தலய சின்னதா ஒரு சிலுப்பு சிலுப்பி
 
கீழ கொட்டிப் பரப்பிடுவேன்
 
பசங்கல்லாம் மடிதாங்காம அள்ளிக்கிட்டு
 
நல்ல மரம்டா ன்னுட்டுப் போவானுங்க -
 
இதைச் சொல்ற ,
 
பத்தாயிரம் பறவைங்க கூடி ஆடி
 
ஒரே சந்தோஷமா விளையாட்டும் கேலி கூத்துதான்
 
அந்த பாட்டுக் கச்சேரி ஓயவே ஓயாது போ !

அந்த சங்கீதம் வேற
 
இப்பவும்தான் சுத்திக் கார்போற இரச்சல்
 
ஒய்வு ஒழிச்சல் இல்லாம ''
 
நம்ம பேசற சத்தம் நமக்கே கேக்காம காதே போயி ..
 
அப்போல்லாம் ஒண்ணுரண்டு பஸ்சு வரும்
 
'பாம் பாம்'ன்னு ஊதிக்கிட்டு
 
அது கேக்கறதுக்கே சந்தோஷமா
 
நம்ம வீட்டுப் பிள்ளைங்க வர்ற மாதிரி ..
 
இப்போப் பார் மேலயே கறுப்பாப் போச்சு
 
புகை அடிச்சு அடிச்சு
 
நாம பச்சைங்க்றதே மறந்து போச்சே
 
போதாதுக்குத் தூசி புழுதி வேற -
 
அப்பல்லாம் நம்ம மேல மஞ்ச குங்குமம் தீட்டி
 
சாமி கணக்கா கும்பிட்டு வேண்டிகிட்டுப் போவான்
 
இப்ப விழிப்பா இருக்கும்போதே
 
ஒரு கையை வெட்டி வண்டில போட்டுப் போயிடறானுங்க
 
இல்லாட்டி குப்பைய அடிலபோட்டுத்
 
தீயை வச்சிட்டுப் போறானுங்க
 
இல்லாட்டி ரோடு போடறேன்னுட்டு
 
வேரைச் சுத்தித் தாரை ஊத்திட்டு
 
தாகத்துக்கு மழைத் தண்ணி கூடக் குடிக்க விடா
 
சாக அடிச்சு அதைச் சாக்காக்கி
 
வெட்டி வித்துடறான்
 
ஒண்ணொன்னாக் காலி பண்ணி
 
பேசறத்துக்கு பக்கத்துல சாதி சனமே இல்லாமப் பண்ணிட்டான்
 
பாரு சோத்துக்கு செத்து எலும்பா
 
நீங்கள்ளாம் இளவட்டமா ?
 
பாத்து புழைச்சுக்கங்கப்பா !
 
 
இளமரம் நிதர்சனம் கண்டு கேட்டு
 
அசந்துதான் போனது !
 
 
---சந்திர கலாதர்
 
19.11.2012 /திங்கள் / கார்த்திகை 4
 
 
பகல்
 
 S.CHANDRA KALAADHAR

Saturday, November 17, 2012

 
விண் பார்த்தால்....! .
&
 
புலராத மொட்டுக் காலை
 
' ச்ச்சில்' லின் ' கட்டிப் பிடிப்பு
 
கார்த்திகைப் பிறப்பே இப்படி எனின்
 
மார்கழிப் பனிக் கடி எப்படி இருக்கும் ?
 
மொட்டைமாடி -
 
இதற்கு இதுவே பொருத்தம் ;
 
வேறு வார்த்தைகள் அல்ல !
 
கார் நீல வானம் --
 
உச்சிமேடுகளில் பதித்த வைரங்கள் -
 
விண்ணைப் பார்த்தால்
 
என்தந்தையே எங்கும் விண்மீன்களாய் !
 
எவ்வளவு அக்கறையுடன்
 
என் பள்ளிப் பருவத்தில்
 
குளிர் வானில் கும்மிருட்டில்
 
நடுங்கும் நக்ஷத்திரங்களை
 
என் இடுக்கிய விழிப் பார்வையோடு
 
தன சுட்டுவிரல் கோர்த்துக் காட்டி
 
என்னை நண்பன் ஆக்கினார் .
 
" இதோ அந்த வீனஸ் அல்லது சுக்கிரன்
 
விடிவெள்ளியாய் , குத்து விளக்காய் --
 
அதோ பார் --
 
நாய் நக்ஷத்திரம் ' சிரியஸ் '
 
மிக அருகாமை விண்மீன் -
 
அது ஓரியன் எனும் வேடன்
 
இழுத்துச் செல்லும் நாய் ஆகும் !
 
ஓரியன் இடைக் கச்சையில்
 
மூன்று நக்ஷத்ர உடைவாள் --
 
அதோ தெற்கே -
 
அடையாள விண்மீன் தொகுதி
 
'சதர்ன் க்ராஸ் ' சிலுவைபோல்
 
நான்கு நக்ஷத்திரங்கள்-
 
கண்ணுக்கு எளிதில் புலப்படா
 
ஆறு கிருத்திகை விண்மீன் தொகுப்பு .--
 
இதோ வடக்கில் 'க்ரேட் பியர் '
 
ஏழு விண்மீன் தொகுப்பாய் --
 
அதன் முன்பக்க இரு மீன்களை
 
மனதுள் சேர்த்து கீழ் இழுத்துப்போ -
 
தொலைவான் தொடுவில்
 
மங்கலாய் ஒரு நக்ஷத்திரம் ,தெரிகிறதா ?
 
ஊன்றிப் பார் -" என்று என் உயரம்
 
சளைக்காது குனிந்து நிமிர்ந்து
 
அந்த ' போல் ஸ்டார் ' எனும்
 
துருவ நக்ஷத்ரம் பறித்துக் கொடுத்தீர்களே !
 
" அப்பா இது இடம் பெயராது
 
இது வைத்தே மாலுமிகள் தொன்று தொட்டு
 
 
வட திசை கண்டு பிற திசை பொருத்தி
 
கடற் பயணம் செய்தனர் ;
 
அதோடு இந்த அச்சைச் சுற்றியே
 
நமது பூமி சுழல்கிறது
 
அதனால் எல்லா நக்ஷத்ரங்களும் கூட
 
இது அச்சாக்கிச் சுழல்வதுபோல் தோன்றும்
 
அதோ உச்சிவானுக்கு ஓர் கச்சை போல்
 
வழியில் சிந்திப் போன பால் போல்
 
கோடிக் கோடியாய் மாவுச் சிதறலாய் 
 
அதுதான் 'மில்கி வே ' எனும் ' பால் வீதி '--
 
தென்மேற்காய் வண்ணங்களை
 
உமிழ்ந்து பளீரிடுகிறதே
 
அதுதானப்பா 'வேகா ' விண்மீன்
 
தேள்கொடுக்காய் விருச்சிகன்
 
எனும் 'ஸ்கார்பியோ ' தொகுதி

'லிப்ரா ' என்னும் ' துலாம் ' " என்றபடி
 
மார்கழி மாதம் வெவ்வேறு நேரங்களில்
 
அந்த உத்தமபாளையத்து
 
இருள் கிராமத்து வீதியில்
 
ஒளிர் வானத்து அதிசயங்கள் அனைத்தும்
 
பன்னிரெண்டு ராசிக் குழுமங்களும்
 
குழந்தை ஆவலுடன் எனை எழுப்பிக்
 
கற்றுத் தந்த பாடம்தான் மறக்குமா ?
 
உங்கள் அன்புதான் தோற்குமா ?
 
பின்னாளில் நான் படிக்கும் இடங்களில்
 
பணி புரிந்த ஊர்களில் எல்லாம்
 
விண்ணின் வரைபடமும் டார்ச்சும்
 
அருகில் கொண்டு பனித் தூவலில்
 
கோரைப்பாய் மீதில் மல்லாத்தி
 
விண்ணை விழிக்குள் வரைந்து
 
பெயர்தேடித் திரிந்ததெல்லாம்
 
நனைந்துபோன தலையணை மறக்குமா ?
 
மார்கழிகள் தான் மறந்திடக் கூடுமோ ?
 
" அதனால் தானப்பா கண்ணன்
 
மாதங்களில் நான் மார்கழி என்றான் "
 
என்று கற்பித்த தந்தை மறப்பேனோ ?
 
 
---சந்திர கலாதர்
 
18.11.2012 / ஞாயிறு /
பகல் மணி 10.30
--
S.CHANDRA KALAADHAR

Thursday, November 15, 2012


ஐம்புலன்கள் ஐம்பூதமுடன்


அனுதினமும் ஆசையோடு
 
 

பேசும் ஒரு ஊமை மொழி
 
 

எனக்குள் அது ஒரு சுக ராகம்
 
 

எழுதுகையில் புரண்டுவரும் ஜீவ நதி
 
 

என் மொழியும் அதன் மொழியும்
 
 

சங்கமிக்கும் வான்வெளி புனிதத்தலம்
 
 

பார்த்தவுடன் புன்னகைக்கும்
 
 

மெதுமெதுவாய் இதழ் மலர்த்தும்
 
 

இதய மொழிகளையே
 
 

மௌனமாய் அனுப்பி வைக்கும்
 
 

உணர்வுகளைத் தட்டி எழுப்பும்
 
 

சொற்களை அன்பாய் ஊட்டிவிடும்
 
 

அள்ள அள்ளக் குறையாத
 
 

கற்பனைகள் கோடி தரும்
 
 

காற்றாய் ஓடி வரும்
 
 

கன்னத்தில் முத்தமிடும்
 
 

கட்டிப் பிடித்து காதோரம் கிசுகிசுக்கும்
 
 

காத்திருக்கும் ஓரமாய்
 
 

வெண் மேகங்களாய்
 
 

பொதி பொதியாய்
 
 

வண்ணங்கள் பூசிக்கொண்டு
 
 

மங்கலமாய் மனம் கேட்கும்
 
 

பறவைகளைப் பறக்கவிட்டு
 
 

ஆனந்தச் சாரலிடும்
 
 

இரவெல்லாம் எனை காணாது
 
 

காத்திருந்த கண்ணீரை
 
 

பச்சிலை மேல் பொறித்து வைக்கும்
 
 

தன சோகத்தைக் காலை நிலவின்
 
 

முகத்தில் பூசிச் செல்லும் ..
 
 

இயற்கையை எனக்கெனவே
 
 

படைத்தானைப் பணிகின்றேன் !
 
 
 
 
 
 

---சந்திர கலாதர்
 
 

16.11.2012 /வெள்ளி /கார்த்திகை 1
 
 

நண்பகல்
 
 

-
 
S.CHANDRA KALAADHAR

Tuesday, November 13, 2012

வயதின் நடை தளரத் தளர

பதற்றம் ஏதோ தொற்றிக் கொள்கிறது ---

உறவின் பசுமை தேடித் தவிக்கிறது

உதைத்த பிரிவை எட்டி அழைக்கிறது

இழந்தது வேண்டும் என்று கூச்சலிடுகிறது

தனிமை தனிமை என்று ஓடிய மனமும்

அண்மை நாடித் தூது விடுகிறது

ஒற்றைப் பருந்தாய் உலவிய எண்ணம்

தாழப் பறக்கும் புறா என்றானது

புதைந்த பாரம்பரியம் புதுப்பித்திடவே

கவனத்துடன் பதியம் போட்டது

சொந்தக் காற்றின் நறுமணம் நுகர

இல்லக் கதவை முழுதாய்த் திறந்தது

எல்லோரையும் அன்பால் அணைக்க

பாசச் சிறகைப் பெரிதாய் வளர்த்தது ..

------சந்திர கலாதர்

14.11.2012 / புதன் / ஐப்பசி 29

காலை மணி 8.

Sunday, November 11, 2012

எத்தனை முறை சொல்லிக் கொடுப்பது ?
அன்பாய் அடுத்து சற்று உரத்து
பின் கடுமையாய் பின் சின்னதாய்ப்
பின் மண்டையில் செல்லத் தட்டுத் தட்டி --
எத்தனை முறைம்மா சொல்வது ?
நெருஞ்சி முள் ஒளி அம்புகளாய்
'சுடீர் சுடீர் 'சிறு வெடிப்புகளாய்ப்
பூத்துச் சிதறி அச்சுறுத்தும்
கம்பி மத்தாப்புகளை முழுக் கை நீட்டி
உயர்த்தித் தொலைவாகப் பிடிக்கணும் என்று
எத்தனை முறை சொல்வது கண்ணா ?
' சுர்ர் ' என்று நுனி ஏறிப் புகை கக்கி
ஒளி கக்கிப் பின்னேகி மங்குதற்குள்
உன் கரம் தாழ்ந்து இரண்டாகக் குறுகுவதேன் ?
அச்சத்தில் உடல் நெளிவதும்
கண் இடுங்குவதும் கை உதறுவதும்
பாதியிலே ' தொப் ' பிடுவதும்
ஏற்றுகிறேன் பேர்வழி என்று
தீபம் அணைப்பதுவும்
பொறுமை இழப்பதுவும்
அடிக்கடி பதறி உள் ஓடி
கை இருப்பு பார்ப்பதுவும்
உன் பின்னாலே விடாது உளறியபடி
நான் வீணே அலைவதுவும் --
அப்பாடா காயங்கள் இன்றி
ஓய்ந்ததடா பண்டிகை நாள் என்று
கிறங்கி நான் நாற்காலி சாய்வதுவும்--
இதுதான் ஒவ்வொரு வீட்டிலும்
தவறாத தீபாவளிக் காட்சியடா !
&
----சந்திர கலாதர்
12.11.2012 / திங்கள் / ஐப்பசி 27
காலை மணி 11.

S.CHANDRA KALAADHAR

சில மௌனங்கள்

&

சில மௌனங்கள்
அழகானவை -
குழந்தையின் !

சில மௌனங்கள்
தவிப்பூட்டுபவை --
காதலின் !

சில மௌனங்கள்
திகிலூட்டுபவை--
அயோக்கியனின் !

சில மௌனங்கள்
ஏமாற்றுபவை --
அரசியல்காரனின் !

சில மௌனங்கள்
பொசுக்குபவை --
காமாந்தகனின் !

சில மௌனங்கள்
எரிச்சலூட்டுபவை --
கோழையின் !

சில மௌனங்கள்
அற்புதமானவை --
படைப்பாளியின் !

சில மௌனங்கள்
நெகிழ்விப்பவை --
பெற்றோரின் !

சில மௌனங்கள்
புரியாதவை --
கடவுளின் !

ஆனால் -
மௌனங்கள் எல்லாமே
உள்ளோசைக் கோலங்கள் !

---சந்திர கலாதர்

11.11.2012 / ஞாயிறு
ஐப்பசி 26 / இரவு மணி 9.

--
S.CHANDRA KALAADHAR

Thursday, November 8, 2012

புல்லாங்குழலா நீ ,கண்ணா ?

&

மாதங்களில் நான் மார்கழி என்றாய் கண்ணா
 
இசைக்கருவிகளில் எது என்று ஏன் சொல்லவில்லை ?
 
ஓஹோ உன் இதழிலும் கரத்திலும் அது குறித்தனையோ ?
 
புல்லாங்குழல் ஏன் தேர்ந்து எடுத்தாய் ?
 
நதியோரம் பசுமைகளில் ஆவினத்தொடு அலைவதாலா?
 
கரையோரம் நாணற்குழல்கள் நிறைந்து கிடப்பதாலா ?
 
இசைக்கு அதை அழைப்பதற்கும் எளிது என்பதாலா?
 
தொலைவுகளில் மேய்கின்ற ஆவினம் மெய்மறப்பதற்கோ ?
 
எண்ணி மருகும் கோபியரை இசைகட்டி இழுப்பதற்கோ ?
 
என்ன நாதம் இது நெஞ்சு துளைப்பதுவாய் !
 
என்ன கம்பீரம் மாவீர நடையாய் !
 
என்ன உருட்டலிது நதி நீர்ச்சுழியாய் !
 
என்ன மழலை இது இதயம் கொஞ்சுவதாய் !
 
வேறு இசைக்கருவி எது இதன்முன் நிற்கும் ?
 
இரு கைப்பிடியுள் அடங்கி இதழடி அமர்ந்து
 
உயிர் நாதம் உட்புகுந்து விரல் நடனம் ஆடிடவே
 
கூர் இசையாய் காற்றின் முதுகேறி
 
எண்திசையும் ஆனந்தக் களிப்பாக
 
கண்கள் செருகிட கால்கள் பின்னலிட
 
தலை ஆட்டம் போட்டிட மனம் மயங்கிடவே
 
இசைமையம் தேடி இதயங்கள் ஓடிவர
 
புல்லாங்குழலில் உன் இசையில் கண்ணா
 
துன்பங்கள் நைந்திடவே உனையே கண்டுகொண்டோம் !
 
 
-----சந்திர கலாதர்
08.11.2012 / வியாழன் / ஐப்பசி 23
பிற்பகல் 1 மணி

S.CHANDRA KALAADHAR

Monday, November 5, 2012

அவர்கள் எல்லாம் மரங்களை ,
இயற்கைவிரிப்புகளை
வான விசாலங்களை
மலைகளின் பெருமிதத்தை
ஆற்றின் அருவியின் அழகினை
நடந்தபடியே ரசித்தார்கள்
தம் நிழற்படக் கருவிகளுள்
தம்மை முன் நிறுத்தி அடைத்தார்கள்
அவனும் பார்த்தான் நின்றபடி மனம் நிறைந்தபடி--
அவன் எழுதினான் அழகிய கவிதைகளை
அவர்கள் அதைப் பார்த்தார்கள் வியந்தார்கள்
தங்கட்கு இவன்போல் எண்ணங்கள் ஏன் கசியவில்லை ?
'ஆஹா எப்படி இப்படி...? '
அவன் சொன்னான்--
" நீங்கள் பார்த்ததே நானும்
நீங்கள் காட்சியின் விளிம்பு வடிவையே கண்டீர்கள்
நான் மரம் பார்த்ததோடு
கிளை வளைவுகளை
இலைத் தொகுப்புகளை
ஒரிலைமட்டும் இலை நரம்புகள்
பின் பூக்கள் அதன் இதழ்கள் மகரந்த ஊசிகள்
வண்ணச் சிதறல்கள் என்றெல்லாம்
தனித்தனியாய் அணுகினேன் ;
அவற்றோடு காதோடு பேசினேன்
அன்பாய் நீவினேன்
நேசிக்கிறேன் என்று மெலிதாய்ச் சொன்னேன்
முழுதாய் எனை நம்பின
தம் ரகசியம் பகர்ந்தன
சொற்களும் தந்தன
ராகமும் இசையும் தாளமும் கூடக் கொடுத்தன
எனக்கு மட்டும் அல்ல ;
எல்லோர்க்கும் பாகுபாடின்றித் தருவன
அண்டிப் பாருங்கள் ஒன்றிச் சேருங்கள்
மனவளம் ஏற்றாப்போல்
ஒருவற்குக் கவிதையாய் ஒருவர்க்கு ஓவியமாய்
ஒருவர்க்குச் சிற்பமாய் என
அள்ளி வழங்கும் பாரீர் என்றவன்
மறு காட்சியுள் வீழ்ந்தான் .
----சந்திர கலாதர்
05.11.2012 / திங்கள் / ஐப்பசி 20
இரவு 9 மணி

--
S.CHANDRA KALAADHAR

Sunday, November 4, 2012

'ல'கர '...ஹா'கார இன எழுத்தொலிகளே மிகுந்து 'அக்குபர்' என்ற தனி வார்த்தை நின்று நிதானமாய் 'இ'கர '..அ'கர ஒலிகள் விரவி
அந்தி வேளைகளில் பள்ளிவாசல் கூர் கோபுரங்களில் பிறந்து உச்ச ஸ்தாயியில் தேன் நகர்வாய் காற்றில் பரவிவரும் அந்தத் தொழுகை அழைப்பு
ஏதோ விவரிக்க முடியாத தவிப்பை என்னுள் தினமும் ஏற்படுத்துகிறது .
நடந்துகொண்டே படிக்கும் என் உலா உறைந்து போகிறது ;
புத்தகம் தானே மூடிக் கொள்கிறது .
எதிர்பாராத் திருப்பங்களும் வளைவுகளும் உயர்ந்தெழுதல்களும் தாழ் சறுக்கல்களுமான ராகப் பயணம் ....ஒரு நொடி அழுகைபோல் ....ஒரு நொடி பரவச விம்மல்போல்...
வான் துளைத்து இறையடி வீழ்தல்போல்....
இப்போது முடியுமா அடுத்த அடி வருமா என்ற திகைப்பு எப்போதுமாய்
ஆனால் பட்டென்று முடிந்துபோய் ஒரு வெற்றிடம் வானைச் சூழ்வதாய் உணர்கிறேன் .
இது வான் எழுகையில் நான் நானாக இல்லை .
வான் மிதப்பது போல் உணர்கிறேன் .
இதேபோன்றுதான் தோப்பு துரவுகள் நிறைந்த சிற்றூர்களில் மரங்களை ஊடுருவி அலைந்து வரும் ஆலயமணி நாதங்களும்
என்னுள் அசாதாரண அதிர்வுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
தெய்வ சந்நிதானத்தில் நான் மட்டும் மங்கிய தீப ஒளியில் மயங்கி நிற்பதுபோல் உணர்கிறேன் .
என் தலைக்குள் கட்டப்பட்டிருக்கும் அப்பெரு மணியை என் கரங்களால் இழுத்து அடித்து ஒலிப்பதாய் ஒரு பிரமை
அல்லது ஒரு பிரேமை .
மனம் கூட இந்த நேரங்களுக்காக ஏங்குகிறது.
---சந்திர கலாதர்

--
S.CHANDRA KALAADHAR
அது ஒரு தனி உலகம் -
மொழிகளில்லா ஒலி உலகம்--
எட்ட நின்று ரசிப்போர்க்கு
சுவை பொழியும் உலகம்
மனம் இளக்கும் உலகம் --
எதை வேண்டி அழுகை ஒலி ?
' ங்கா ..ங்கா ..ங்கா ..ங்கா '
அலை அலையாய்
விடாது தணியாது பரிதாபமாய் --
' ஓவ் ..ஓவ்வ் ..ஓவ் ..ஓவ்வ் '
பதில் ஒலியாய்
இணை ராகத்தில்
இணக்கமான ஓர் சுக லயத்தில் --
அழுகை நிற்பதும் இல்லை
பதில் தேய்வதும் இல்லை--
தூக்கிக்கோ என்று கேட்கிறதோ ?
பசிக்குது என்று தவிக்கிறதோ ?
ஈரம் ஊறுகிறேன் சொல்கிறதோ ?
வியர்க்கிறது என்று கதறுவதோ ?
எறும்போ கொசுவோ
கடிக்கிறது என்று அழுகிறதோ ?
எத்தனையோ கேள்விகள்
மிதப்பனவே என் மனதில் !
என்ன கைவேலையோ
தனித்த அத்தாய்க்கு --
' ஓவ் ஓவ் ' இடை இடையே
' என்னடா செல்லம்
என்னடா கண்ணு
ஏண்டாம்மா வேண்டாம்மா
அம்மா வந்துட்டேண்டீ
யார் அடிச்சது என் ராஜாவை ? '
என்பனபோல் விரவல் நிரவல்கள் !
அதற்கென்ன புரிந்தது ?
இவளென்ன புரிந்து கொண்டாள் ?
குழந்தை அழுகை
நெஞ்சைக் கரைக்கிறது -
அழுகை மெல்லத் தேய்கிறது
தாய் அதனை அணைத்தாளா?
அலுத்துப்போய் அதுவே
அழுத களைப்பில் உறங்கிற்றோ ?
பச்சிளம் பிஞ்சு மொழிக்கென்று
இறைவா ஓர் நிகண்டு தாராயோ ?
-----சந்திர கலாதர்
05.11.2012/ திங்கள் /ஐப்பசி 20
காலை 8 மணி
தென் திசை பார்த்து நின்றாள்

வான் பார்த்த மாடம் மீது--

முகமோ கீழ்த்திசை திரும்பிற்று
...
அடர் கூந்தலோ தோள் வழி

மேற்கு சரிய இறங்கிற்று

வலக்கையில் ஒரு சீப்பு ஏந்தி

வழிசிகை இடக்கை உட்பிடித்து

பொன்னேர் ஒட்டுதல்போல்

தலை நிலத்தை

உழுகிறாள் உழுகிறாள்

உச்சி முதல் நுனி வரை

சலியாது சளைக்காது

ஒய்யார நிலைப்பாட்டில்

முதுகு இப்பக்கமாய்

ஓர் மணி நேரமாய் --

தலை மேடெல்லாம்

ஆழக் கோடுகள்

வாய்க்கால் போட்டிருக்குமோ ?

இன்னமும் திருப்தியில்லை

என்று முடிப்பாளோ ?

பொறுமையின் எல்லையில்

பொருந்தாத நான் !

ஒரு வழியாய் அப்பாடா ---

ஆனால் கூந்தல் கூட்டி

தன் பின்புறம் மிடுக்காய் வீசியவள்

அரைமணி நேரம்

அன்பாய்க் கோதி விட்டாள்

கூந்தல் சங்கு இறுக்கி

சிலமுறை அடித்துக் கொண்டாள் .

முகம் வானம் பார்க்க

கூந்தல் திரட்டிப் பரப்பிக்

காதுமடல் உள்ளனுப்பிப்

பின் நுனி கோதி----.

இருட்டி விட்டது

இவள் எப்போதுதான் அதற்கு

மூன்று கால் தருவாளோ ?

முடுக்கிச் சடை காண்பாளோ ?

---சந்திர கலாதர்

04.11.2012 /ஞாயிறு / ஐப்பசி 19

மாலை 6 மணி .
இவர் கடவுள் அல்லர்

ஆனால் மனிதரும் அல்லர்

கண்களில் அத்தனை கனிவு

...
தாயோ எனின் தாயும் அல்லர்

இவரை நேரில் பார்த்தவன் நான்

அருகில் வியந்தபடி

காஞ்சியில் நடந்தவன் நான்

வேறு எவரும் துறவிகளில்

இவர்போல் ஈர்த்தவர் இல்லை

மெல்லிய சொல் மென் பார்வை

நலிந்த மேனி கனிந்த நடை

புத்தகங்கள் சொல்லும்

இவர்தம் முக்கால சக்திகள்

நான் அறியாததால் ஏற்பதில்லை

இவர் பார்வை படருகையில்

ஓர் நொடி உரசிச் சென்றிடினும் --

அது விடுங்கள் -

இவர் நிழற்படம் பார்த்ததுமே

ஒரு காரணமும் புரியாமல்

கண்கள் உருகிக்

கண்ணீர் திரளுதம்மா !

நம் வஞ்சம் கள்ளம் எல்லாம்

பின்கதவு பார்க்கிறதே !

முன் வாயிலில் அடக்கமாய்

பண்பு குனிந்து வருகிறதே !

மெத்தப் படித்த மதாதிபதிகள்

விழிகளில் விளைகின்ற கர்வம்

இவர் கண்ணுள்ளே காண்பதில்லை

இவர் சொற்களிலும் எளிமை

ஒரு தாயின் அன்புச் சாரல்

இவர் ஒரு குழந்தைத் துறவி

ஒரு துறவிக் குழந்தை !

எண்சாண் கிடையாகப்

பாதம் பணிகின்றேன்!



---சந்திர கலாதர்

04.11.2012

ஞாயிறு /பிற்பகல் 3 மணி

ஐப்பசி 19
--
S.CHANDRA KALAADHAR
See more

Friday, October 19, 2012

the song of the rain

the song of the rain .
&
i was born pure at the heights of the skies
became soily as i planted passionate kisses on earth
painful though ,but to become the life sustaining force
causing the green carpet of life dance in glee everywhere.
yes ..it is blessed to be soiled for the sake of others' joy.

----s.chandra kalaadhar

Friday, October 12, 2012

all attention to nature

even the faintest invitations of the tiny blades of grass are audible to me
and the weakest chirpings of smallest wings make the finest impact on my ears
the deepest silences of the majestic mountains convey me the loudest messages
and above the din of the roar of the giant waterfalls i trace the most solemn teaching.
-------s.chandra kalaadhar

Tuesday, September 4, 2012

வாலிபம் மனதுள் விளையாடும்
தனிமை விளையாட்டுத்தான்
எத்தனை எத்தனை சலிக்காமல் ஓயாமல்--
பார்க்கும் பெண்ணை எல்லாம்
விழியுள் இழுத்து கைபிடித்து
காற்றிலே நிலவிலே வாரி அணைத்து
காதல் பரவசக் கவிதை மொழி பெய்து
முத்தங்கள் சூடாய் இமைகள் இட்டு
கற்பனைகள் அடைகாத்து காவலிருந்து
காமத்தில் அரவம் என அவள் இறுக்கி
வியர்த்து விறுவிறுத்து தானே திரவமாகி
ஆவியாகி சிறகெடுத்து விண் நுழைந்து
மாயை என்றுகூட நம்ப மறுத்து
மூடிய விழிகளுள் இளமை வாழ்ந்த காலம்
இன்றெங்கே போனதுவோ இறந்ததுவோ ?
இளமைச் சூடிறங்கிப் போனதுமே சடலமானேன்--
கடந்ததுள் மறுபடி நுழைந்தால்
வரிசை வரிசையாய் அந்தப் பெண்கள்
அதே இளமை மிடுக்கும் செருக்குடன் ;
என் மனதுள் அவர்க்கு என்றும் இளமை வரம் ;
நானோ வெண்தாடி நரை திரை மூப்புடனே !
பெண் பித்து ஏறாத ஆண்மனம் உண்டுதானோ ?
காமம் கலவாத காதலும் உண்டுதானோ ?
யுகங்கள் எத்தனை உருண்டாலும் புரண்டாலும்
ஆணின் தவறாத முடியாத தணியாத ஆய்வு
பெண் என்னும் பொன்னான புதிரே !
---சந்திர கலாதர்

Monday, August 27, 2012

i could see billions upon billions of stars
scattered thick on the deeps of high heavens
puzzling thoughts and even imagination--
creation's might stuns me speechless ;
i stand far far far below as a worthless speck
wondering who the god might be
that created mammoth spheres of flaming lights
condescending to build my fickle frame
with intricate knots and bends and rivers of blood
and keeping a trillion mysteries inside me--
o god , where would be my place of rest after death
amongst the infinite stars in remotest space?

---s.chandra kalaadhar

Saturday, August 25, 2012

சிறு புல்லாய்ச் சிரிப்பதில் என்ன சுகம் ?
சிறு புள்ளாய்ப் பறப்பதில் என்ன சுகம் ?
ஒரு கூழாங்கல்லாய் நீரோடைதனில்
மயங்கிக் கிடப்பதில் யாது சுகம் ?
பெருமலையாய் நீல வடிவெடுத்து
வான் முட்டிக் கிடப்பதில் யாது சுகம் ?
மணல் சரிவில் அலையாய்ச் சிரித்தேறி
புன்னகைப் பூச்சறுக்கலில் என்ன சுகம் ?
ஒரு குட்டிக் காற்றாய் ஓடி வந்து
இலைகளிடைத் திரிவதில் யாது சுகம் ?
ஒரு புகழும் வேண்டேன் பெயர் வேண்டேன் ;
இந்த சுகங்கள் என்றும் எனைச் சேரின்
அதுவே போதும் மனம் நிறைவேன் !
-----------சந்திர கலாதர்

Sunday, July 29, 2012

some achievements to look back on one's birthdate
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
&
the following data and statistics from my log book for my motorcycle , are on the solo trip i performed from sriperumboodhoor to madhurai on 08.08.1982 and back on 11.8 .1982 in my 2-stroke enfield -200 cc motorcycle.
the time taken to cover the onward distance of 469 km . inclusive of a rest period of 75 mts is 10 hrs .15 mts.
the time taken to cover the return distance of 479 km . inclusive of a rest period of only 45 mts is 10 hrs.30 mts.
i would like to state that stc buses too took the same time for this journey.
it was a time when i tested frequently my physical capability to withstand heavy strains from such tasks.
when i reached madhurai ,my brother blinked at me as if i was a stranger since i and my dress were blackened to such an extent that he couldn't recognize me at a first glance.
please note that the roads were not of 4 lanes and were not smooth as it is today and if two buses were coming in the opposite directions the motor cycle had to be run on the mud brims.
l was 37 yrs. old at that time and was assistant divisional engineer / tneb.at sriperumboodhoor.
i still feel the urge at 68 yrs to test my physical stamina.
today is my birth date ,having covered a life distance of 67 yrs .and looking at the milestone of 68 at my front.
i still walk a distance of one and a half hours at a stretch under the hot sun without a minute of rest or relaxation.
this trip was performed on my tamizh calendar star birhday of aadi and raevathy star on 10 .08. 1982 , though my birthday as per english calendar was 30.07 1982. the trip was performed in spite of the acute pain in my left shoulder. during the return journey the pain was very severe. the machine was performing superbly.
my mother was bedridden and she was very worried that she asked me to talk over phone every moment i reach a town enroute. as there was no cell phone at that time i spoke with my family when i reached thiruchchi ,ulundhurpettai,vizhuppuram and chenkalpattu and finally sriperumboodh
---------------s.chandra kalaadhar
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
sriperumboodhoor-madhurai- sriperumboodhoor
motorcycle trip as a lone rider on 08.08.1982 undertaken by me
on enfield-200 cc [ minibullet ] 2 stroke engine.[1978 model ]
---------------------------------------------------------------------------------------
starting time -----------05.45 hrs-----------------------------------0 km------15820km ----------8 lrs petrol.------rs.50.00
singapperumalkoil ---06.20 hrs-----------------35mts---------27 km-----15847km.
madhuraandhakam--07.00 hrs-----------------40mts---------65 km-----15885km
vizhuppuram-----------08.45 hrs-----------1hr 45mts--------150kms----15970km------------2lrs ------rs.13.00
rest------------------08.45-09.00hrs---------15 mts ---------------------------------------------[ petrol filling]
thiruchchi---------------12.15 hrs-----------3hrs15mts--------326kms----16146km
rest------------------12.15-12.45hrs---------30mts
kottaampatti-rest-----------------------------------15mts
maeloor------------------[ forgot to note ] - 435km----16255km-------------3lrs----------------rs.20.35
rest------------------------------------------------10 mts-----------------------------------------------[ petrol filling]
madhurai ---------------16.00 hrs-----------3hrs45mts---------469km----16289km
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
total journey time-----------------------------10hrs15mts-----615mts
total rest period ------------------------------ 1hr 15mts--- 75mts
actual riding period --------------------------- 9hrs 0mts----540mts
total distance covered -------------------------469 kms
km covered per minute by vehicle------------469/540------0.869km/minute----52km/hour[speed av.]
reached reserve level at-----------------------16248km
reserve level while initial fillup---------------15820km
distance travelled in between----------------- 428km
therefore total petrol consumed------------- 10 lrs
distance covered---------------------------------428km/10 lrs------42.8km/lr.
performance of m/c------------------------------469/10
total cost of petrol---------------------------------rs.83.35 [13 lrs ]
cost per km of journey---------------------------rs.83.35/469km----18 p.roughly
################################################################################################################################
return trip on 11.08. 1982
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
madhurai ..................06.15 hrs..............................................................16311 km.....[ 8 lrs.at 16314km.]
thiruchchi ....................09.45 hrs....[rest upto 10.00 hrs.]
[ kaaviri bridge ]
ulundhurpettai ............1230 hrs.....[ rest upto 13.00 hrs ].........................16600 km.
vizhuppuram ...............13.45 hrs..............................................................16640 km......[ 3 lrs].
chengalpattu ...............16.00 hrs
sriperumboodhoor........16.45 hrs..............................................................16790 km
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
total journey time........06.15 ~16.45 hrs = 10 hrs. 30 mts.= 630 mts.= 10 hrs 30 mts
rest in between .................................................................= 45 mts.
actual journey time............................................................= 585 mts. = 09 hrs .45 mts.
total distance covered in return trip [ 16311~ 16790 ].......= 479 km .
km/mt................................................................................ = 479 /585 =0.82mt.
average speed.................................................................. = 0.82 * 60 =49.2 km/hr.
petrol.................... [8 + 3 ] = 11 lrs.
fuel cost.............................................................................= rs.75 . 30 np
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
to and fro statistics :
total petrol cost ....rs 83.35+rs 75.30 = rs. 158.65 np
total distance covered = 469 +479 km =948 km
total journey hours[ inci. of rest ] =10 hrs 15 mts.+10 hrs. 30 mts + 20 hrs.45 mts.= 1245 mts.
@@@@
compare the petrol cost in 1982 of rs .6.50 np and rs 76/- in 2012
------s.chandra kalaadhar

Monday, July 23, 2012

கங்கைக் கரையோரம்
#
அப்பழுக்கு இன்றி ஹிமாலயத்தில் துளிர்த்து
மலைகள் உருண்டு பள்ளங்கள் வீழ்ந்து
புண்ணிய நதியாய் உயிர் நதியாய்
உயிர் ஊட்டும் நதியாய் நம்பிக்கை நதியாய்
தெய்வதமாய் , தாயாய்த் தரை இறங்கி
தன்னலமே இன்றித் தன்னை அழுக்காக்கி
இறந்தோரை மடி தாங்கி
புண்ணிய லோகங்கள் புகுவிப்பாய் எனும் அவர்
அசையாத நம்பிக்கை மௌனமாய்ச் செவி ஏற்றி
அன்பாய்ப் பெருகி ஓடும்
எங்கள் இந்திய இதயமே ! கங்கைத் தாயே !
நன்றியுடன் பணிகின்றேன் உன் கரை ஓரம் !
பூவால் அர்ச்சிக்கிறேன்
என் சொல்லால் அர்ச்சிக்கிறேன்
உன் பாதம் என் கண்ணீரால் கழுவுகிறேன் !
உன்னிலே கோடி மாந்தர் அனுதினமும்
மனதில் கோடிக் கவலையுடன் நீராடி
தாய் மடிமேல் தன் குறை சொல்வதுபோல்
மனம் விட்டு விழிமூடி ஏதோ சொல்கின்றார் ;
அவர்களைப் பார்க்கின்றேன் வைத்த விழி பெயர்க்காது -
அந்த முகங்களில்தான் எத்தனை நிலவொளி !
முழு நம்பிக்கையில் ஊறிய நிம்மதியின் அழகு நடை !
தெய்வமுடன் எதிர் எதிரே ஒற்றையாய்ப் பேசும் மன நிறைவு !
கை இரண்டும் கூம்பி விழி மூடிப் பிரார்த்திக்கையில் ...
இந்த நம்பிக்கையை இந்தப் பரவசத்தை
இந்த உன்னதத்தை இந்த சத்தியத்தை
இன்னும் எத்தனை கோடிப் படை எடுப்புகள்
இந்த மண்ணிலே வந்தாலும் வெற்றிகொள்ள முடியாது -
ஏனெனில் இது மிகத் தெய்வீகமானது தாயே !
நீயே சத்தியம் ! நீயே கடைத்தேற்றுவாய் ;
யுகம் யுகமாய் நெஞ்சிலே செதுக்கம் கொண்ட சத்தியம் நீ !
விழிமூடி நெஞ்சுள் உனை நிறைக்கும் போதினிலே
பாதி உடல் முழு உயிர் உன்னில் மூழ்கி இருக்கையிலே


அந்த முகத்தைப் பாருங்களேன் அந்த தெய்வ சந்திப்பை !
மனம் நெகிழ்ந்து போகிறேன்
இந்தியர் அனைவரும் நம்பிக்கையில் உன்னுள் ஒன்றாயினர்
வார்த்தை இல்லை அந்த ஒரு முக தேஜசை
சொற்கோலம் போட்டுக் காட்டுதற்கே !
பெண்கள் நீராடுகையில் தெய்வமே ஆயினரோ !
பெண்ணை,பெண்மையை ,தாய்மையை
மண்டியிட்டுப் பணிகின்றேன் கங்கைக் கரையினிலே !
-------சந்திர கலாதர்
[ 23.07. 2012 / திங்கள் /ஆடி 8 /இரவு 9 மணி ]

Sunday, July 1, 2012

நிலப்பரப்பு விடாது ' நீர் தா..நீர் தா ' என்று
நீலக் கடலைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது ;
கடலோ ' மாட்டேன் ...மாட்டேன் ' என்று
ஓயாது மறுக்கிறது ; திமிராய் நிலத்தை அறைகிறது--
சூரியன் காதில் இந்தத் தீராத ஓலம் தெளிவாய் விழுகிறது ;
கடலினுள் தன் பலகோடிக் கரங்களை நுழைக்கிறது ;
ஈரத்தை அள்ளி உயரமாய் மேகமாய் மாற்றுகிறது ;
நிலத்தின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பி வைக்கிறது ;
காற்றைக் காதல் மொழியச் சொல்லி
நீர்மலர்களை நிலமெங்கும் சொரிய வைக்கிறது ;
நிலம் மறுநாள் மென்பச்சையாய்ப் புன்னகைக்கிறது ;
கடலோ இப்போது ' நதியே வா...நதியே வா ' என மாற்றி இசைக்கிறது !
-------சந்திர கலாதர்
[ 01.07.2012/ ஞாயிறு
வாக்குவாதங்களால் கொள்கை விடாப்பிடிகளால் வார்த்தை மோதல்களில் மனக் காயம் பெற்றவர்கள் உடன்பாடு முயற்சிகளின்போது 'அவன் ஏன் அதைச் சொன்னான் ?..இவள் ஏன் அதைச் சொன்னாள் ?' என்பதாக குலைத்துக்கொள்கையில் ஒன்றை நினைக்க வேண்டாமா ?
கரண்டியில் எண்ணெய் காய்ச்சித் தாளிக்கையில் நெருப்பின் வேகத்தில் கடுகு சில எல்லை தாண்டிக் குதித்து வெளியே விழும்தானே !
சினம் கொழுந்து விட்டு எரிகையில் எந்தச் சொல் எப்படி எங்கே வாயிலிருந்து தெறித்து வீழும் என்று எவரால்தான் சொல்லமுடியும் ?
கீழே வீழ்ந்து நாசமான பொரிந்த கடுகைத் தேடித் தேடி வாழ்க்கையை நாசம் செய்யப் போகிறீர்களா
அல்லது இதயத்துக்கு உள்ளேயே மறைந்து இருக்கும் அன்பைப் பேணி வாழ்க்கைப் பாதையில் முன் செல்லப் போகிறீர்களா ?
[ பல டிவி நிகழ்ச்சிகளின் பாதிப்பில் ]
---சந்திர கலாதர்
என்னை மதம் மாற்ற யாரும் தெரு முனைகளுக்கு அதிகாலை வாய்க்குழல் எடுத்து இருளைக் கிழித்து தம் மதமே உயர்ந்தது என்று ஓலங்கள் இட வேண்டாம் .
எனக்குத் தெரியும் என் மதம் என்னை எந்த ஒரு இடர்ப்படுத்தவில்லை .
என் மதத்திலும் உன் மதத்தைவிட நல்ல போதனைகள் உண்டு ;
உன் மதத்தைப் போலவே என் மதத்திலும் தீயோர் சதிகள் உண்டு.
என் மதம் என்னை எந்தக் கட்டாயத்துள்ளும் உட்படுத்தவில்லை.
என் மதத்தையே புரிந்துகொள்ள இயலாதவனுக்கு உன் மதத்தை எப்படிப் புரிந்து கொள்ள முடியும் ?
என் மதம் எனக்கு சர்வ சுதந்திரம் அளித்துள்ளது .
என் மதம் கடவுளையே திட்ட எனக்கு உரிமை அளித்துள்ளது ;மறுக்க குறுக்கே நின்றதும் இல்லை.
என் புனிதம் மதங்களில் இல்லை .
என் மனதில் தான் உள்ளது .
எனவே உங்கள் குழல் வைத்தியங்களை நிறுத்திக் கொள்ளுங்கள் .
உங்கள் மனங்களுக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போய்விடுங்கள் .
------சந்திர கலாதர்

Wednesday, June 20, 2012

வானம் தொட்டு விடும் தூரத்தில் இருக்கிறதோ ?-
கார்காலம் அப்படி நினைக்க வைக்கிறது.
காக்கைக் கூட்டங்கள் குழுக்குழுக்களாய்த் திரிவதுபோல்
அதன் கழுத்து நிற மேகத் தொகுதிகள் வானம் நிறைத்து இருக்கின்றன -
பூமிக் குழந்தையை வானம் கருமேகப் பூச்சாண்டி இறக்கி பயமுடுத்துகிறதோ ?
மேக விளிம்புகளில் மழைச் சொரிவுகளின் நெடிய அசையும் திரைகள் அற்புதமாய் !
வானில் காற்றைக் கெஞ்சிக் கொண்டிருக்கும் பட்டங்கள் .
தென் வடலாய் மேலைத் திசையில் மேக சஞ்சாரங்கள்-
மழை இறக்க மனமில்லாத மேகப் பொதிகள் இடுக்குகளில் இழிய விட்டுவிட்டு யாருக்கோ எங்கோ
நீர்க்கலயம் ஏந்திச் செல்கின்றன.
குயில் ஒன்று மேகங்களைப் பரிதாபமாய் , ' டு...வீ , டு...வீ ' என்று ஏங்கி அழைக்கிறது .
அவற்றின் காதில் விழுந்ததோ இல்லையோ ,தெரியவில்லை .
----சந்திர கலாதர்
[ 20.06.2012/ மாலை 5 மணி ]

Tuesday, June 19, 2012

அம்மா !
நம் திறமை ஏதோ ஓர் துறையில் பாராட்டுப் பெறுகையில் ,மனம் துள்ளிக் குதிக்கிறது ;
இது இயல்புதானே அம்மா !
அந்தப் பாராட்டை அப்படியே மனம் கனக்கச் சுமந்துகொண்டு , நம் உளம் நெருங்கிய ஒருவர் முன்னே ,மிகுந்த ஆசையுடன் கவிழ்த்து ,அவரது விழி விரிதல்களை ,முக விசாலங்களை ,நெஞ்சு ஊறிவரும் பெருமைச் சொற்களைக் கேட்டு வானில் பறக்க இதயம் ' பறபற' க்கும்.
என் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் ,அதுவும் என்னாலேயே மாற்றம் செய்யப்பட்டவை , சிலவற்றை அயல்நாட்டு கவிஞர்கள் சிலர் மனமாரப் பாராட்டி ,அது பலர் பார்க்க வெளிவருகையில் ,எனக்கு அதைத் தூக்கிக் கொண்டு ,அம்மா ,உன் திசையை நோக்கித்தான் ஓடிவரத் தோன்றுகிறது .
எவர் மொழிகளிலும் நான் எதிர்பார்க்கும் உணர்வுகள் ,அதன் விளைச்சல்கள் இல்லாது போகின்றன ;
என் மனம் தவிப்பில் சோர்கிறது ;
அம்மா ,மற்ற எவரிடமும் ,அது என் உடன்பிறப்புகள் ஆயினும்கூட ,என்னால் என் உணர்வுகளை
உள்ளது உள்ளபடியே கொட்டித் தீர்க்க முடியாமல் குன்றி நிற்கிறேன் ;
என் சிறகுகள் வெட்டப் பட்டது போன்ற வலியில் துடித்துப் போகிறேன் ;
ஆமாம் ,என்னால் எவர் முன்பும் இயற்கையாய் நான் எண்ணும் உயரத்துக்குப் பறக்க முடியவில்லை , தாயே !
அவர்கள் முன்பு நான் செயற்கையாகிறேன் ;
' தற்பெருமைக்குள் தலைகுப்பற வீழ்கிறானே! என்ன பிதற்றல்? ' -என்று நினைத்து விடுவார்களோ என்று என்னை விலங்கிட்டுக் கொண்டு விடுகிறேன் தாயே !
ஒவ்வொரு வரியாக ,ஒவ்வொரு சொல்லாக என் கவிதைகளின் ஆழ அகலங்களை நான் விளக்க எண்ணுகையில் ,பிரதிபலிப்புகள் மங்கிய நிலையில் நான் தோற்று நிற்கிறேன் ,அம்மா !
அம்மா ,உன்னிடம் தான் என் இதயம் எல்லாத் திரைகளையும் விலக்க முடிகிறது ;
என் முகமே பல வாய்களாக பரிணமிக்கின்றது ; அணுஅணுவாக ஒவ்வொரு உணர்ச்சியையும்
மலர்த்துகிறது ;
அம்மா, நீ பேசுவதில்லை ;மௌனமாகிறாய் ;
உன் கண்கள் என்னை விழுங்குகின்றன ;என் சொற்களைத் தாகத்துடன் அருந்துகின்றன.
குறுக்கீடுகள் எதுவும் இல்லை ; ஆர்வக் குறைவுகள் எங்கும் இல்லை ;
என் வாய்க்கலயம் அனைத்தையும் கொட்டித் தீர்த்த பின் ,பெருமிதமாய் ஒரே ஒரு புன்னகை உன் இதழ்களில் தவழ விடுவாயே , அது ," நீ ஜெயச்சுட்டடா கண்ணா ! " என்று சொல்லாமல் சொல்லும் ;
அதற்காக நான் என்றும் ஏங்குகிறேன் .
உன்னைத்தேடி மொட்டை மாடியில் திறந்த வெளியில் வான் நோக்கிக் கூவி நிற்கிறேன் ;
அம்மா ,விண்ணுலகில் நீ எங்கிருந்தாலும் அங்கே என் உணர்ச்சி ஊற்றுகள் பாய்ந்து உன் பாதங்கள் நனைக்கும் ;
எங்கிருந்தாலும் நீ மனம் எல்லாம் மொழியாக வாய் மட்டும் மௌனமாய் வாழ்த்துவாய் ;நெஞ்சம் பெருமையால் விம்முவாய் ;
அது போதும் அம்மா எனக்கு !
---சந்திர கலாதர்
கொன்றை மர வகைகள் தமக்குத் தாமே பூ அபிஷேகம் செய்து கொண்டிருக்கின்றன ;
அல்லது ஆகாயத்தின் பாதம் பணிந்து நின்று ,உச்சந்தலைகளில் மலர் தூவிய ஆசிகள் பெற்றனவா !
இலைகளைத் திருப்பித் திருப்பிப் பூங்காற்று அப்படியென்ன அதிசயம் காண்கிறது ?
காற்று பூக்களைத் தாலாட்டுகிறது ;
காற்றை நான் பார்க்கிறேன் ;
காற்றை நான் கேட்கிறேன் ;
காற்றின் மொழியினை நான் படிக்கிறேன் ;
காற்றை நான் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறேன் !
இந்த உலகின் உல்லாசம் எனக்கு வேறெங்கு கிடைக்கும் இப்பிரபஞ்சத்தில் ?
நான் ஜூன் மாதத்தில் வசந்தத்தின் வண்ண மலர்ச் சொரிவுகளை , கொத்து மலர்க் கோலங்களை
இன்னும் ஓராண்டிற்கு இழந்து கொண்டிருக்கிறேனா ?
நான் புதியதாய்க் கார் மேகங்களுக்காகக் காத்திருக்கிறேனா ?
நீர்ப் பாதைகள் மேலேறி மின்னல்களைப் பிடிக்க மயங்குகிறேனா ?
மின்னல் கயிறுகள் கொண்டு மேகக் கூரை அமைக்க எண்ணுகிறேனா ?
வானம் , வியர்க்க விறுவிறுக்கும் சூரியனுக்கு ஒரு வழியாய் விடை கொடுத்திருக்கிறதோ ?
சூரிய தாகம் ஒருவாறாகத் தணிந்து விட்டதோ ?
நண்பகலிலும் ஓர் மங்கிய மயங்கும் ஒளி காற்றோடு குதூகலமாய் உறவாடுகிறது !
கடைசியில் ஒளிந்துவிட்ட சூரியனை ....சூரியனா அது ?...சூரியனின் சந்திரனை அல்லது சந்திரனின் சூரியனை ..மேகத் திரை வழி பார்க்கிறேன் , துன்புறுத்தாத ,அரைத்தூக்க விழிகளுடன் !
காற்றுத்தான் மற்ற நான்கு சக்தி வடிவங்களுக்குமே உயிரூட்டம் கொடுக்கிறது.
காற்றில்லாமல் ஒளி , ஒலி,மண் ,விண் எதற்குமே அழகில்லை ;சக்தியும் இல்லை .
காற்றுத்தான் இப்புவியின் விழாக்களின் நாயகன் ;
சந்தோஷங்களின் உயிர் ஊற்று ;
சிரிப்புகளின் சிறப்பு !
மரங்கள் ,மலர்கள் ,இலைகள் ,அலைகள் ,ஜ்வாலைகள் ,விண்மீன்கள் எல்லாமே மகிழ்ச்சிக் கூத்தாடுவது காற்றின் கைகுலுக்களில்தான்..தோழமையில்தான்!
காற்றே ...என்னை நீ அயர்விலிருந்து , தளர்விலிருந்து, மரணத்திலிருந்தும் காப்பாற்றுகிறாய் !
என்னைக் கொஞ்சுகிறாய்..தழுவுகிறாய் ,கட்டி அணைக்கிறாய் ..தள்ளியும் விளையாடுகிறாய் !
புற்தரைகளில் மாயம் காட்டுகிறாய் ;
அலைகளைப் பூரிக்க வைக்கிறாய் ;
செவிகளில் பறவைகளின் இனிய அழைப்புகளைச் சேர்க்கிறாய்-
ஆஹா ! ஒரு மழை துவங்குகிறது மாயச் சூழலிடை--
இதை எப்படி மழை என்பது ?
அங்கொன்றும் இங்கொன்றுமாய் ...பல நொடி இடைவெளிகள் விட்டு விட்டு ..மேக மெல்லிய கசிவாய்..என்னை நனைக்காது ..ஈரமும் ஆக்காது ..மெல்லிய தொடர் தூறலும் ஆகாது ..அப்படி என்ன மழை இது /
இது மழையே அல்ல ..பின் எது சொல்லத் தெரியவில்லையே !
இவை மாயத் துளிகள் ..என்னை மயக்கும் மலர்களோ ?
என் மேனியை அத்துளிகள் தீண்டுகையில் என்னில் எத்துணை சிலிர்ப்பு !
உதடுகள் உள்ளச் சொற்களைப் பிதற்றுகின்றன;
ஆனந்தம் என்னை உருட்டுகிறது;
இது மேனி அனுபவங்கள் ..சொல்லில் சிறக்காது .
---சந்திர கலாதர்
[ 18.06..2012 / திங்கள் கிழமை / ஆனி 4 / நந்தன ஆண்டு /மாலை மணி 4 ]

Monday, June 18, 2012

o what a climate today !
o where is the sun that squeezed dry my blood into sweat so long ?
the day unusually rolls up and sets aside the sparkling quilt of the sun;
and the ashen clouds have spread their thin mats all over the skies
and the cheerful winds on joyful feet spread happiness everywhere
on top of all , as a crowning glory , there is a dreamy rain -
no , i cannot call this rain , or a misty fall ,nor a soft drizzle-
it is of dreamy drops ,here and there , distanced by long seconds ,
and tossed far and wide by the sprinting and sporting wind,
sending shivers of thrill into the streams of blood
and giving birth to spontaneous expressions of ecstasy;
it is a rainless rain , raining joy and dance -
the light is cool and gentle and not hurting;
it is the winds that create the festival of joy
and spray laughter that bubbles up amidst the flowery trees-
o what is the language of the flowers and leaves ?
are they one and the same or different ?
o how i wish to speak their noiseless language !
today i could venture out into the open even at 4 p.m.
with no risk of burning my soles and skin ;
today my dance is not on flames but on flowers-
the sky has bid adieu to the sweating sun of june ;
at last i find the sun of the moon or the moon of the sun
high above on the western skies ,harmless and half-sleepy ;
the nature today has painted everything in mild colours,
drawing hearts out into the open to the bliss of the seasons !
where else in the universe except on this lovely earth
could i get this solemn bliss from the elements of nature ?
i will be born again and again on this beautiful earth .
------s.chandra kalaadhar [18.06.2012/ monday /aani 4/nandhana /4 p.m.

Saturday, June 16, 2012

மகனே ! என் இளைய மகனே ,சூரியா !
வா , என் அருகில் வந்து அமர் ;
எனக்குள் அழுத்தமான சில லக்ஷியங்கள்!
அவற்றை நீ அலட்சியம் செய்ய மாட்டாய் ;
என் ஜீவ அணுக்களால் அமைந்தவன் நீ -
எப்படி நீ மாற்று சிந்தனை கொள்ளுதல் கூடும் ?
பெண்ணைப் பெற்றோரிடம் இவ்வளவு பொன் போடுங்கள் ;
உங்கள் பெண்ணுக்காக எவ்வளவு கூடுமோ
அவ்வளவு போட்டாலும் சம்மதம் எனக் கூறிப் பின்
' இவ்வளவு தானா? 'எனும் ஏமாற்றம் அதில் ஒளித்து
அதனால் பெண் வாழ்வை முகம் இடித்து
நாராசங்களால் செவி கிழித்து சிதைக்கலாகாது ;
பெண் அன்றிப் பொன் வேண்டேன் என்று உறுதியாய் நில் .
பொன் வேண்டின் என் திறத்தால் நான் பெறுவேன் எனச் சொல் .
அப்படிச் சொனனால் பையனுக்கு என்னவோ ஏதோ என்று
திரைமறைவில் முகவாய் இடிப்போர்க்கு
நீ சிறந்த ஆண்தான் என்று காலம் பதில் சொல்லும்;
பொன் கேட்டு அலைந்தால்தான் நீ ஒரு பெண்டுகன் -
எதுவுமே வேண்டாம் என்று அலங்காரம் அடுக்கிவிட்டு
பின் 'அப்படியே சொன்னாலும் நீங்கள் சீதனம் அடுக்க வேண்டாமா ?'
என்று கதைப்போர் பலர் உண்டு உலகிலே ;
அந்த அக்கப்போர் எதுவும் இன்றி ஒரு சீர் பொருளும்
உறுதியாய் நீயே ஏற்காதே; ஊர்ப்பெண்டிர் மெச்சுதற்கு
நீ பகடைக் காய் ஆகாதே ;தர்மத்தின் பழிச்சொல் ஏற்காதே -
உன் பட்டம் படிப்பு,தொழில் இன்ன பிற கிள்ளையாய்க் கூறி
' படிக்காதவனுக்கே அங்கே அறுபது பவுன் போட்டான் '
என்று சூசகமாய்ப் பேசி உள்ளக் கிடக்கையை தம்பட்டம் போடாதே.
படிக்காதவனுக்குத்தானே , ஆம். பொன் துணை வேண்டும்
படித்தவனுக்கு எதற்கப்பா பொன் கவச மறைப்புக்கள் ?
படிப்பைப் பொன்னால் எடை போடும் மூடமை ஏற்காதே ;
பிள்ளை பெற்று விட்டால் ஈசனுக்கு அடுத்து நானே என
நினைப்பவர் மத்தியிலே நம் குடும்பம் வேறுபட்டதப்பா-
பெண் பெற்றவன் நம் அடிமை எனும் ஆணவத்தின் அடிவயிற்றில்
நெருப்பு அள்ளிப் போடப் பிறந்தவர் நாம் என்று கொள்-
திருமண நாளில் ' பளீர் ' ஒளியிடை பரிசுக்காகவும் பல் இளிக்காதே!
பரிசுகள் கண்டிப்பாக ஏற்கமாட்டேன் என்று அழைப்பில் தெளிவாக்கு;
ஒரு கை குலுக்கி மறு கையுள் கையூட்டு பெறுவதற்கு ஈடு அது;
ஆசிகள் மனதார வாழ்த்துக்கள் மட்டுமே உனை என்றும் வாழ்விக்கும் -
உன் வீட்டின் ஒவ்வொரு பொருளும் உன் வியர்வையில்
உன் ஆண்மையில் நேர்மையில் நடந்து உள் புகவேண்டும் ;
மணமகளும் மணமகனும் எளிமை ஆடையில் எழில் சிறக்க வேண்டும்
பல்லாயிரம் கொட்டி பட்டாடைகள் பூணாதே ,பேசுவோர் பேசட்டும் ;
சம்பிரதாயம் என்று வாய்க்கு வாய் பேசி அச்சேற்றில் நாறாதே
சம்பிரதாயங்கள் என்றுமே தமக்கு சாதகமாக வளைக்கப் படுபவை
பெண் வீட்டாரைக் கொல்வதற்கே உருவான கொலைக் கருவிகள் ;
பெண் படித்திருந்தாலும் அவள் மொட்டை மரம்
ஆண் படித்துவிட்டால் ஆலமரம் எனக் குருடாய் நினைக்காதே ;
பெண்ணுக்கும் வாய்ப்புக் கொடு ;மேற்படிக்கச் செய் -
அந்தப் படிப்புக்கு பெண் வீட்டார் படி அளக்க எண்ணாதே !
பெண்ணை வேலைக்காரி என்று நாளெல்லாம்
உன் பின்னேயே துண்டு தூக்கி அலைய வைக்காதே
சமையலில் துவைத்தலில் அனைத்து வேலையிலும்
அன்போடு கைகொடு தாழ்வாகப் பார்க்காதே -
உன் தாயோ தந்தையோ இதை மீறி ஒருவேளை
ஊர் பேசும் நாய் குலைக்கும் என்று காரணம் கடைந்தெடுத்து
அதைக் கேள் இதைக் கேள் என்று உன் செவியில் வித்திட்டால்
மகனே அவர்களைத் தயங்காது தூக்கி எறி;
ஆண் போல வாழ்வாய் அறுதலியாய் என்றும் வாழாதே
உன் தந்தை அப்படித்தான் திருமணம் செய்து கொண்டான்
உன் தாத்தா பாட்டி பெருமை போற்று -
நீயும் என் வழி நடப்பின் என் ஆன்மா சாந்தி கொள்ளும் .
--------சந்திர கலாதர்

Monday, June 4, 2012

அவள் ஒரு தாய் . தன் மகள் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் என்று உணர்கிறாள். சுற்றிலும் ஜ்வாலைகளாய்க் கோபமும் ஆவேசமும் ; இவற்றையெல்லாம் தாண்டியவள் தாய். அவள் கண்களில் தெரிவது தன் மகளின் பதட்டமோ தவிப்போ அன்றி வேறொன்றும் இல்லை .பேச்சின் நுணுக்கங்கள் அவளுக்கு அக்கறை இல்லை .தன் அத்தனை நகைகளையும் அள்ளுகிறாள் ; இரு கைகளுள் ஏந்துகிறாள் ;கொந்தளிக்கும் கணவனிடம் நீட்டுகிறாள் --" எனக்குப்பின் இவையெல்லாம் அவளுக்குத்தானே ; இனி எனக்கு எதற்கு ? நான் இனி எங்கே பகட்டாக வெளியே செல்லப் போகிறேன் ..அவளிடம் கொடுத்து விடுங்கள். அவள் நம் குழந்தை ; வாழவேண்டியவள் " என்று சிறு தயக்கங்கள் எதுவுமின்றித் தருகிறாள் .
அந்தத் தியாகத்தை ,பாசத்தை என்னென்பேன்!
அந்த கரங்களின் பாச வெம்மையில் பொன் நகைகள் இளகி உருகி தங்க நதியாய்க் கண்ணீர் பெருக்கின .
அந்தத் தாயின் நோயுற்ற மெய் மறைந்து ,தங்க ஜ்வலிப்பாய் ஓர் பேரழகுடன் அவள் பிரகாசித்தாள்.
பணம் ,சொத்து இவை எல்லாமே பிணமாய்க் கீழே கவனிப்பாரற்றுக்  கிடந்தன.
------சந்திர கலாதர்

Thursday, May 31, 2012

மணல் குவியலும் சிறு குழந்தைகளும் உலகமெங்கும் பிரிக்க முடியாதவை ;
மணற்குவியல் ," வா..வா ! " என்று ஒலியில்லா மொழியில் மிகப் பாசமாய்க் குழந்தைகளை அழைக்கிறது.
ஆயிரம் விலை உயர்ந்த விளையாட்டுப் பொம்மைகளையும் மணலையும் குழந்தை முன் வை ;
அது மணலை நோக்கியே பாய்ந்தோடி வந்து தொப்பென அதன் மீது வீழ்ந்து மகிழும் . மணலில் சிறுகை செருகி ,இறைத்து ,தூற்றி ,அளைந்து,குவித்து ,தோண்டி ,மறைத்து ,உருண்டு ,பிறண்டு,சிந்தி, சிதறி ,கொட்டி, வாரி --
தனக்குத் தானே பேசி ,தன் விளையாட்டைத் தானே உருவாக்கி ,பசி மறந்து ,தாயும் மறந்து ,அதிலேயே தூங்கியும் போகும் எனின் ,இந்த மணலின் மகிமையை என்னென்பது !
மணலில் எழுதாத விரல்கள் உலகில் உண்டோ ?
மணலில் பதியாப் பாதங்கள் உண்டோ ?
மணலில் குதியாத நெஞ்சமும் உண்டோ ?
மணலில் குழந்தை ஆகாப் பெரியோரும் உண்டோ ?
மணலில் மஞ்சம் காணா மனமும் உண்டோ ?
மணல் ஒரு மந்திரம் ; புரியாத தந்திரம் !
மணல் மேட்டில் எது வீழ்ந்தாலும் அது குழந்தையாய்த்தான் எழும் !
-------சந்திர கலாதர்.

Tuesday, May 29, 2012

crowded by thousands of forms of gods ,
each hovering over my head in mad circles,
yes , i have lost my meditation and devotion;
my lips cry for a god
and my heart seeks another
and my intellect runs after another;
i am at a loss to determine which of this pantheon
may rush for my help in my hour of distress;
confusion stirs me to stupidity and turbidity-
i politely send them all away
and i think of the one god
who has no face ,no trunk
but only two feet for me to grab on
and hold them on to my chest ;
i am in terrible fears to lift my head up
lest i may see a body or a face ;
for i know with only his feet in vision
i reach my nameless and formless god
in seconds of my submerging into meditation !
------s.chandra kalaadhar