Tuesday, November 13, 2012

வயதின் நடை தளரத் தளர

பதற்றம் ஏதோ தொற்றிக் கொள்கிறது ---

உறவின் பசுமை தேடித் தவிக்கிறது

உதைத்த பிரிவை எட்டி அழைக்கிறது

இழந்தது வேண்டும் என்று கூச்சலிடுகிறது

தனிமை தனிமை என்று ஓடிய மனமும்

அண்மை நாடித் தூது விடுகிறது

ஒற்றைப் பருந்தாய் உலவிய எண்ணம்

தாழப் பறக்கும் புறா என்றானது

புதைந்த பாரம்பரியம் புதுப்பித்திடவே

கவனத்துடன் பதியம் போட்டது

சொந்தக் காற்றின் நறுமணம் நுகர

இல்லக் கதவை முழுதாய்த் திறந்தது

எல்லோரையும் அன்பால் அணைக்க

பாசச் சிறகைப் பெரிதாய் வளர்த்தது ..

------சந்திர கலாதர்

14.11.2012 / புதன் / ஐப்பசி 29

காலை மணி 8.

No comments:

Post a Comment