Tuesday, June 11, 2013

நடராஜனே !
என் மீது நின்று ஆடும்
ஒரு கால் நடம் போதும் !
வலிக்கிறது இடுப்பு
சற்றே இறங்கி நட ராஜனே !
அகில அண்டங்கள் தாங்கும்
உன் சுமை என் எளிய மேனி
எப்படித் தாங்கும் அறிகிலையோ ?
உனக்கோ இது ஆனந்த நடனம் !
கூத்தின் வேகத்தில் கூந்தல் நேர் நிற்க
கச்சை காற்றில் அலை பாய
நாகங்களும் கூடக் களித்தாட
நான் மட்டும் உன் குதிகளில்
வலிகளின் திருகலில் நையவோ ?
வாழ்க்கை நோகுதைய்யா !
உன் ஆனந்தப் பெருக்கினில்
ஒரு துளியேனும் இவ்வாழ்வில்
எனக்கும் தந்து அருள் செய்வாய் !

----சந்திர கலாதர்
11.06.2013 / செவ்வாய் / வைகாசி 28
காலை 5 மணி /விஜய ஆண்டு