Thursday, June 23, 2011

MY BOSS IS MY ' MIND '.

My boss is my ' Mind '


My boss is my ' Mind '--

I am his only ' stenographer '

But insincere and inefficient ;

My boss ever walks on my head ;

He is very fast in dictation

Ever agile and sleepless-

He cares not I take down or not-

He has no time to look back

To worry on these small issues !

My notepad is full of hurried scribblings

Which are beyond me even to decipher !

I miss many many but record only a few-

All mutilated and out of context and bruised

But my boss never asks for the draft

Yes, he has no time to look back !

Never he condemns me

But will say " you are only the loser ! "

-----S.CHANDRA KALAADHAR

I AM CLUELESS FOR WHOM I WRITE !

I Am Clueless For Whom I Write..!


In my knowledge I have no friends nor relatives

Nor those who welcome my works into their hearts ;

But who knows such exist beyond my skies and seas

With their silent lips and lazy fingers?

Really I am clueless for whom I pen my works

But to unburden my heart that weighs me down

And for the dizzy kick that keeps me afloat

May there be a mirror-soul of me

That awaits in the dim distance far far beyond

For my songs to alight on its willing shoulders !



--s.chandra kalaadhar

Wednesday, June 22, 2011

THE MYSTERIOUS MIND !

The Mysterious Mind !

The Mind is a perennial river
Ever in foaming floods ,
Night and day
Rolling and tumbling thoughts
From nowhere
On fast currents
Along its NOISELESS way--
You will lose every fish
If not alert with your net !

----S.Chandra Kalaadhar

TO SOME GREED IS THE BLOOD !

Alas ! there are some
To whom the eyes are waste,
To some the tongue a viper,
To some limbs a vice !
O God ! why such cruel creations?
Why in so many the heart is absent
And greed is the blood?


-----S.CHANDRA KALAADHAR

A SHAMELESS MAID I AM..!

வெட்கமற்ற அபலை நான் !

எனதருமைத் தோழியே !
பாழும் மனம் -
சம்மதமின்றி இதயம் கவர்ந்து சென்ற
அந்த அழகிய கள்வனை
எண்ணி எண்ணித் தவிக்கின்றதே !
என் இதழ்கள் பூசல் செய்கின்றனவே !
முரட்டு இதழ்களில் முயங்க வேண்டி ஓலமிடுகின்றன !
வெட்கமற்ற அபலை நான் --
அந்தோ..!
ஒவ்வொரு உறுப்பும் பித்தனாக்கும் ..
கொலை செய்யும் அவனது அணைப்பிற்காக
ஏங்கிப் புலம்புகின்றது !
அன்பே ! ப்ரிய மொழியாளே !
போ ! ...விரைவாகப் போ !
அந்தச் சாட்டையைக் கொண்டு வா !
வந்தனையோ..?
இதோ ..
காதலில் ஏங்கித் தவிக்கும்
என் இதயத்தின் மீது ஊர்கின்றதே ...
பார்த்தனையோ...?
அந்த இரவுத் தேரின்
சோம்பேறிக் குதிரைகளை .அல்ல..கழுதைகளை --
அந்தச் சாட்டையால் சொடுக்கி விரட்டு சீக்கிரம் !

---------சந்திர கலாதர்

MISERY THAT MAKES WONDERS !

விந்தை புரியும் வேதனையே !

கடவுள் நினைப்பில் நெஞ்சம் நிறைந்து
இறைவன் திருவுரு இமைகளில் நிறுத்தும்
ஆத்திகன் ஒருவனைத் துன்பம் நீ அடையின்--

வேதனையில் அவன் மிக வாடுறும் போதெலாம்
" கடவுளே இல்லை !பொய்மை அனைத்தும் ! "
எனப்பல உரைத்தே இறைதனை நோவான் !

" கடவுளே இல்லை ; ஈனன் நம்புவோன்;
உடையடா சிலைகளை ! "--எனப் புறம் பேசியே
உள்ளத்து நினைப்பைத் திரையிட்டு மறைத்து
வாதங்கள் செய்து ஊரினை ஏய்க்கும்
நாத்திகன் ஒருவனைத் துன்பம் நீ அடையின் --

வேதனையில் அவன் மிக வாடுறும் வேளையில்
" கடவுளே ! கடவுளே !காப்பாற்று எனையே ! "
எனப் பல புலம்பி அழுது அரற்றுவான் !

முன்பேசிய வாதம் மறைவிடம் பொசுக்கி
இல்லாத இறையை இப்போது அழைப்பான் !
சுற்றியே பார்த்து ஒருவரும் இல்லையேல்
நெற்றி முழுவதும் நீற்றினைப் பூசுவான் !

யாருமே அறியாது பூசனைகள் புரிவான் !
கதவினைத் தாளிட்டு விழுந்தும் எழுவான் !
" சிவசிவ " எனவும் போற்றியே கரைவான் !
ஆயிரம் தெய்வங்கள் கூவியே அழுவான் !

வேதனையே ! நீ புரி விந்தைகள் எல்லாம்
ஒன்றா / இரண்டா ? உரைசொல இயலுமோ ?


----------சந்திர கலாதர்

Tuesday, June 21, 2011

O LADY WHO COMES ALONG WITH ME IN MY LIFE.. !

என் இணையாய் என் வாழ்வில் வருபவளே ..!

உயிரற்ற காலைப்பொழுது
உறங்குகின்ற மலைத்தொடர்கள் --

வனப்பில்லா வான்வெளி
காற்றசையாச் சமவெளி--

முடமான முகிற்கூட்டம்
இசைபாடாப் புள்ளினங்கள் --

நகை இழந்த தடாகங்கள்
தடங்கலிடும் ரயில்பாதை--

ஓலமிடும் ஒலிபெருக்கி
ஒளியற்ற தொடுவானம் --

தூங்கியாடும் வண்டிக்காரன்
துயில் காணா வண்டிமாடு --

சோகம் பாடும் தார்ச் சாலை
சோர்வுற்ற என் கால்கள் --

புகை கக்கும் சுமை லாரி
புழுங்குகின்ற என் உள்ளம் --

களைத்திட்ட வழிப் போக்கர்
கனமான என் இதயம் --

ஊளையிடும் ஊர்நாய்கள்
ஊனமான கற்பனைகள் --

சோபையற்ற வேளைதனில்
வழித்துணையாய் எழில் நங்காய் !

நைந்திட்ட இதயமதை
மெல்லிதழ்கள் மின்னலாகா
வாள்போலும் கூர்சொல்லாலே
சல்லடையாய்த் துளைக்காதே !

எழில்விழிகள் மூளலாகாக்
காட்டுத்தீப் பார்வையினால்
மெலிந்த மனத்தினை நீ
கருணையின்றிப் பொசுக்காதே !

சலனமற்ற வேளையினில்
சஞ்சல மனத்துடனே
நெடுந்தூரம் வழி நடக்கும்
அன்பனுக்கு உயிரூட்ட --

மலர் போலும் இத்ழ்களிடைத்
தேங்கி நிற்கும் தேனமுதில்
இதமளிக்கும் இன்சொற்கள்
தோய்த்தெடுத்துச் சுவை ஊட்டி --

அழகான விழிகள் விளைப்
பார்வைக் குளிர்த் தென்றலிலே
அன்புடனே தவழவிட்டு
நெஞ்சத் தடாகத்தின்
நகையற்ற நீர்பரப்பில்
மென்மையாய் வருடிச் சென்று
சலசலக்கும் அலைச் சிரிப்பைத்
தவழவிட்டு வழி நடப்பாய் !

களையற்ற காலையிலே
அறிவுவெளி அயர்ந்துவிட்ட
எண்ண முகிற் பின்னல்களை
விழி மணிகள் துள்ளுகின்ற
பார்வைக் கதிர் முத்தமிட்டு
ஒளிக் கோலம் பல காட்டி
உதயகாலத் தொடுவான்போல்
தகதகக்கச் செய்திடுவாய் !

-----சந்திர கலாதர்

Monday, June 20, 2011

O..The Cuckoo The Incorrigible !

தொல்லைக் குயிலே !

குயிலே!
ஏ வெட்கப்பட்ட ஜென்மமே !
ஏன் வெட்கம் கெட்டுக் கத்துகிறாய் ?
லக்ஷார்ச்சனை யாருக்கு?
என் செவிப்புலன் தோற்கிறதே?
பத்து மரங்களிலும் ஒரே குரலாய்
கோயில் திருவிழாப் பத்துக் குழல் ஒலிபெருக்கிகளாய்
உனைத் தேடுகையில் என் கழுத்து நோகுதையோ !
இலை அசைவுகொண்டு உன் இசை அசைவு தேர்வதிலும்கூட
நான் தோற்கிறேனே !
மாறுபடும் இடைவெளிகளில்
வேறுபடும் அழுத்தங்களில்
கோபம் கொப்பளிக்க காதல் அலைமோத
சோகம் கப்பி வர மோகம் மோதி எழ
குரல் மாற்றி இசை மாற்றி
காலை முதல் எத்தனை முறை நீ
இக்காற்றைக் கலக்கியிருப்பாய் !
வாய்தான் வலிக்காதோ?
நெஞ்சும் புண்ணாகிப் போகாதோ ?
சுமக்கும் காற்றுக்கே வலிக்கிறதே!
என் செவியும் தான் நோகிறதே !
வசந்தம் முழுதும் கதறும் நீ
பிற பருவங்களில் எங்கு ஒளிந்தாய் ?
இக் குரலையும் எங்கு ஒழித்தாய்?
ஏ...அடங்காப் பிடாரி !
திருட்டுப் பறவாய் !
தரை தட்டாக் கவியே !
இலை மறைவு இருளே !
குரல் குறைக்கா ஓலமே !
இடைவிடாது உச்ச ஸ்தாயியில்
கூக்குரல் போடாதே !
நெஞ்சை அறுக்கிறது உந்தன் வேதனை !
எங்காவது ஓடிப் போய்விடு !
எனக்கே பைத்தியம் பிடித்துவிடும் போலானேன் !
அன்றிடில் நான் ஓடிப் போகிறேன் !
நீ கத்தியே சாகாதே !
இது வசந்தம்தான் ..தேர்தல் நேரமல்ல !

..............சந்திர கலாதர்

[சில நேரங்களில் நம் கவலையிடை குயிலின் கூவலும் மிகத் தொல்லை தந்திடும் .குயில் பற்றி நன்கு அறிந்தவர்களால் மட்டுமே இதனை அனுபவிக்க முடியும் ]

Saturday, June 18, 2011

MOTHER ! YOU COULD NOT HAVE LEFT US !

Mother ..!
You could not have left us from this world
Though you met with that final knock of death ten years ago ,
All the time lamenting " I have lived my life fully
And seen all its pains and pleasures
In their barest attires and unadulterated attitudes
And I should not be a burden to any of my children
Riding on cursed bed, cooking ever thoughts in hazy visions
On helpless bones and loosened muscles.....! "
I could deeply infer that you could not leave us ,
So dear to you with your bonds on us so tight and strong!
Yes I know your heart could not rest content even in heaven
Without casting caring looks on all your posterity--
Yes Mom ! I feel your strong presence hovering ever around me
Everywhere I tread on amidst all my trials and tribulations.
Your tight close look scares and disperses clouds of gloom to nowhere.
Yes mom ! I am not alone, never alone
But in your invisible company charging me with hope!

--
S.CHANDRA KALAADHAR