Wednesday, June 22, 2011

A SHAMELESS MAID I AM..!

வெட்கமற்ற அபலை நான் !

எனதருமைத் தோழியே !
பாழும் மனம் -
சம்மதமின்றி இதயம் கவர்ந்து சென்ற
அந்த அழகிய கள்வனை
எண்ணி எண்ணித் தவிக்கின்றதே !
என் இதழ்கள் பூசல் செய்கின்றனவே !
முரட்டு இதழ்களில் முயங்க வேண்டி ஓலமிடுகின்றன !
வெட்கமற்ற அபலை நான் --
அந்தோ..!
ஒவ்வொரு உறுப்பும் பித்தனாக்கும் ..
கொலை செய்யும் அவனது அணைப்பிற்காக
ஏங்கிப் புலம்புகின்றது !
அன்பே ! ப்ரிய மொழியாளே !
போ ! ...விரைவாகப் போ !
அந்தச் சாட்டையைக் கொண்டு வா !
வந்தனையோ..?
இதோ ..
காதலில் ஏங்கித் தவிக்கும்
என் இதயத்தின் மீது ஊர்கின்றதே ...
பார்த்தனையோ...?
அந்த இரவுத் தேரின்
சோம்பேறிக் குதிரைகளை .அல்ல..கழுதைகளை --
அந்தச் சாட்டையால் சொடுக்கி விரட்டு சீக்கிரம் !

---------சந்திர கலாதர்

No comments:

Post a Comment