Thursday, November 15, 2012


ஐம்புலன்கள் ஐம்பூதமுடன்


அனுதினமும் ஆசையோடு
 
 

பேசும் ஒரு ஊமை மொழி
 
 

எனக்குள் அது ஒரு சுக ராகம்
 
 

எழுதுகையில் புரண்டுவரும் ஜீவ நதி
 
 

என் மொழியும் அதன் மொழியும்
 
 

சங்கமிக்கும் வான்வெளி புனிதத்தலம்
 
 

பார்த்தவுடன் புன்னகைக்கும்
 
 

மெதுமெதுவாய் இதழ் மலர்த்தும்
 
 

இதய மொழிகளையே
 
 

மௌனமாய் அனுப்பி வைக்கும்
 
 

உணர்வுகளைத் தட்டி எழுப்பும்
 
 

சொற்களை அன்பாய் ஊட்டிவிடும்
 
 

அள்ள அள்ளக் குறையாத
 
 

கற்பனைகள் கோடி தரும்
 
 

காற்றாய் ஓடி வரும்
 
 

கன்னத்தில் முத்தமிடும்
 
 

கட்டிப் பிடித்து காதோரம் கிசுகிசுக்கும்
 
 

காத்திருக்கும் ஓரமாய்
 
 

வெண் மேகங்களாய்
 
 

பொதி பொதியாய்
 
 

வண்ணங்கள் பூசிக்கொண்டு
 
 

மங்கலமாய் மனம் கேட்கும்
 
 

பறவைகளைப் பறக்கவிட்டு
 
 

ஆனந்தச் சாரலிடும்
 
 

இரவெல்லாம் எனை காணாது
 
 

காத்திருந்த கண்ணீரை
 
 

பச்சிலை மேல் பொறித்து வைக்கும்
 
 

தன சோகத்தைக் காலை நிலவின்
 
 

முகத்தில் பூசிச் செல்லும் ..
 
 

இயற்கையை எனக்கெனவே
 
 

படைத்தானைப் பணிகின்றேன் !
 
 
 
 
 
 

---சந்திர கலாதர்
 
 

16.11.2012 /வெள்ளி /கார்த்திகை 1
 
 

நண்பகல்
 
 

-
 
S.CHANDRA KALAADHAR

No comments:

Post a Comment