Monday, June 4, 2012

அவள் ஒரு தாய் . தன் மகள் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் என்று உணர்கிறாள். சுற்றிலும் ஜ்வாலைகளாய்க் கோபமும் ஆவேசமும் ; இவற்றையெல்லாம் தாண்டியவள் தாய். அவள் கண்களில் தெரிவது தன் மகளின் பதட்டமோ தவிப்போ அன்றி வேறொன்றும் இல்லை .பேச்சின் நுணுக்கங்கள் அவளுக்கு அக்கறை இல்லை .தன் அத்தனை நகைகளையும் அள்ளுகிறாள் ; இரு கைகளுள் ஏந்துகிறாள் ;கொந்தளிக்கும் கணவனிடம் நீட்டுகிறாள் --" எனக்குப்பின் இவையெல்லாம் அவளுக்குத்தானே ; இனி எனக்கு எதற்கு ? நான் இனி எங்கே பகட்டாக வெளியே செல்லப் போகிறேன் ..அவளிடம் கொடுத்து விடுங்கள். அவள் நம் குழந்தை ; வாழவேண்டியவள் " என்று சிறு தயக்கங்கள் எதுவுமின்றித் தருகிறாள் .
அந்தத் தியாகத்தை ,பாசத்தை என்னென்பேன்!
அந்த கரங்களின் பாச வெம்மையில் பொன் நகைகள் இளகி உருகி தங்க நதியாய்க் கண்ணீர் பெருக்கின .
அந்தத் தாயின் நோயுற்ற மெய் மறைந்து ,தங்க ஜ்வலிப்பாய் ஓர் பேரழகுடன் அவள் பிரகாசித்தாள்.
பணம் ,சொத்து இவை எல்லாமே பிணமாய்க் கீழே கவனிப்பாரற்றுக்  கிடந்தன.
------சந்திர கலாதர்

No comments:

Post a Comment