Tuesday, May 22, 2012

கோடையின் சீற்றத்தில் என் கவிதை ஆறு வற்றியதோ ?
ஊற்றின் உள் உயிரை உறிஞ்சிக் குடித்ததுவோ ?
மணல் விரிவாய் என் வெறுமை அம்மணமாய்க் கிடக்கிறதோ ?
ஏன்? ஏன் ? ஏன் ? என்று எத்தனை கேட்டிருப்பேன் ?
நண்பர் சிலர் , எழுது தளங்கள் என்னைக் கேட்கின்றன-
காலை மாலை எனக் காற்றில் வட்டமிடும் கற்பனைகாள் !
எனை நீத்து எங்கு சென்றீர்? வறுமையில் வாடவிட்டீர் ?
உடலின் சுணக்கங்கள் உள்ளத்தை உதைப்பதுவோ ?
எண்ண நதிகளே எங்கிருந்தாலும் எனைச் சேர்வீர் !
-----சந்திர கலாதர்

No comments:

Post a Comment