Saturday, January 28, 2012

28/01/2012./சனி
 
பிற்பகல் 4 மணி
 
திறந்த மாடியில் குளிர் காற்றிடை இதமான வெயிலில் 
 
வான் பார்த்துப் படுத்து மேக சஞ்சாரங்கள் ரசிக்கிறேன் ...
 
நீலவான்கடலில் காற்று கடைந்தெடுக்கும் வெண் நுரைகள்.... 
 
ஒன்றாகி, ஒன்றுக்குள் ஒன்றாகிப் பெரிதாகி ,பல்வடிவாகி ,
 
கைகோர்த்து எங்கோ மெதுவாய்ப்  பயணமாகி ஓயாத  உள்--
 
வெளி  இயக்கமாகி  ,பிய்ந்த  பஞ்சாகி  ,அந்தரத்தில்  அழகாய்  நீந்தி  நீந்தி ,
 
ஓய்வெங்கே  புரியாததாகி  
 
மனித  மனத்து  அனைத்து  குணங்களும்  கொண்டதாகி  ,மௌனமாய்  ,
 
அப்பாவியாய் , கவிதையாய் , ஓவியமாய் ,எண்ணிறந்த  பறவைகள்போல் 
   ...
 
எங்கே  இவற்றின்  ஜனனம்  ,பயணம் , மரணம் ?        .
 
-----சந்திர கலாதர்

No comments:

Post a Comment