Friday, August 26, 2011

O MY POEMS ! DRESS IN SIMPLE GARMENTS !

என் கவிதைகளே ! எளிமையாகுக !

&

என் கவிதைகள் நீலக் கடலாய் ஆர்ப்பரித்து

அலங்கார அலைகளால் பரவசப்படுத்தி

ஆனால் அதன் இருண்ட திகில் ஆழங்கள்

உயிர்ப் பயத்தில் எட்டவே நிறுத்திவிடுவது போல்--

உப்பு எச்சங்களில் கசகசக்க விட்டுவிடுவது போல் இல்லாது

அச்சமே இன்றி குழந்தைகளும் கூட நாடி இறங்கிப்

பளிங்குப் படுகையின் தெள்ளிய நீரோட்டமதில்

உள்ளமே சலசலக்க அமிழ்ந்து நீந்தித் திளைக்கும்

வார்த்தைச் சோலை சூழ் எளிய நீரோடை என

நீங்கள் நெஞ்சாரப் புரிந்திடின் அஃது எனக்கு

இப்பிறவிப் பயனைக் கட்டியம் கூறிடும் !

------சந்திர கலாதர்

No comments:

Post a Comment