Saturday, November 26, 2011

words

வார்த்தைகள்
 
&
 
வார்த்தைகள் வலிமையானவை
 
வார்த்தைகள் உக்ரமானவை
 
வார்த்தைகள் தீப்பிழம்பானவை
 
வார்த்தைகள் புயலானவை
 
சொற்கள் செதுக்குபவை
 
சொற்கள் சாம்பலாக்குபவை
 
சொற்கள் சபிப்பவை
 
சொற்கள் மென்மையானவை
 
வார்த்தைகள் வருடுபவை
 
வார்த்தைகள் தென்றலானவை
 
வார்த்தைகள் பாத ஆழங்களிலும் எரிந்து எழுபவை
 
வார்த்தைகள் இதய ஆழங்களிலும் மலர்ந்து மணப்பவை
 
மொழிகள் விழிநீர் விளைப்பவை
 
மொழிகள் மௌனிப்பவை
 
மொழிகள் தியானிப்பவை
 
மொழிகள் நம்மையே தாக்குபவை
 
கூரானவை குருடானவை
 
சதிரானவை புதிரானவை
 
வார்த்தை அதிர்வுகள் சர்வ சக்தி
 
உண்மை சாபங்கள் பலிப்பவை .
 
நாவை அடிக்குமுன் உதட்டைக் கேள்
 
உதடு கடந்திட விளைவு உன்வயம் இல் .
 
 
 
------சந்திர கலாதர்

No comments:

Post a Comment