Thursday, November 24, 2011

இவர்கள் வரவும் செலவும் புரிவதில்லை .
 
&
 
இவர்கள் கைபேசிக்களின் புரியா நுணுக்கங்கள் போல்
 
இன்றைய இளைஞர்களின் போக்கும் பேச்சும் -
 
இவர்கள் வரவும் சொல்வதில்லை ;
 
செலவுகளும் அறவே புரிவதில்லை -
 
தனக்கென்றும்கூடக் கணக்கு வழக்கில்லை ;
 
கேட்டுவிட்டால் முகம் முறுக்கிய துணியாகிவிடும்;
 
வார்த்தைகளோ எற்றி உதறிவிடும் -
 
'உப்புக்குச் சப்பாணி நீங்கள் எல்லாம்!' என்று
 
விழிகளின் விளையாட்டு விரைந்து சொல்லும் -
 
இவர்களின் 'பார்முலா ஒன்றின் ' முரட்டு வேகம்
 
பெற்றோரின் வயிற்றில் புளி கரைத்துவிடும்;
 
ஐம்பூதங்களின் ஒரு முரட்டு அசைவினிலே
 
விதியின் விஷமச் சிரிப்பினிலே
 
வாழ்வே வெடிச் சிதறல்களாகி விடும் எனும்
 
சிறு எண்ணமும் கூட இவர்களுள் எழுவதில்லை -
 
பரிசுகள் வாரி வீசுதலில் சுகம் என இவர் மகிழ்ந்தாலும்
 
பெறுபவற்கும் ஏற்பதில் சில கொள்கை வலியுண்டு-
 
அன்பு தோய்ந்த ஓர் பார்வை கனிவான ஓர் மொழி
 
இவைதானே பெற்றோர் நாடும் பெரும் பரிசு !
 
இதுமட்டும் இவர்களுக்கு ஏனோ புரிவதில்லை -
 
வாழ்க்கை செலவிடலில் இவர்கள் தூக்கமில்லை ;
 
இவர்தம் கவலையில் பெற்றோர்க்கும் தூக்கமில்லை !
 
என் பெற்றோரும் இப்படித்தானே நினைத்திருப்பர் ?
 
 
-------சந்திர கலாதர்

No comments:

Post a Comment