Wednesday, February 15, 2012

வாழ்க்கைச்  சாலை பயணிக்கையில்

ஆசை குற்றம் செய்ய  மனம் தூண்டுகையில்

இறைவா ! மனச்சாட்சி  என எனில் எழுந்து  

போக்குவரத்துக் காவலர்என  வழிநின்று 

நெஞ்சில் ஓர் சிறு பயம் நீ விதைத்து 

குற்றம் தடுத்து நேர் வழி காட்டுகிறாய் 

விபத்தும் விளையாது எனைக் காக்கின்றாய் !

-----சந்திர கலாதர்  

No comments:

Post a Comment