Sunday, October 12, 2014

A CALL FROM THE MESSENGER OF DEATH 

&
I ANSWER THE CALL TO MY CELL PHONE IN MY HEART--
O IT IS THE CALL FROM THE MESSENGER OF DEATH ;
HE SAYS ,' I AM ON MY MISSION TO YOUR HEART !' 
I SENSE A TINY FIREBALL OF PAIN ROLLING IN MY HEART ; 
WAS IT PLAYING WITHIN MY CHEST IN THE RECENT PAST ?
I VISUALIZE SO MANY THINGS THAT BECOME VIVID NOW ;
THIS EXCESS SWEATING , THE WEAKNESS AND LOSS OF VIGOUR
AND THE EMBRACE OF SLEEP , ARE ALL THESE MY SUDDEN FANCIES ?
I FOLD UP ALL MY SENSES AND DEEPLY MEDITATE ON THE GOD OF DEATH ;
AND REACH HIS MANSION TO PLACE MY FOLLOWING PLEAS --
O LORD OF DEATH , SPARE ME A CLEAR CONSCIENCE OF A FEW MINUTES
PRIOR TO TEARING AWAY MY BEING FROM THE UNWILLING FRAME ;
LET ME VISUALIZE ALL THE FINEST MOMENTS I SPENT ON EARTH
ALL THESE YEARS WITH MY MOM AND DAD , WIFE AND CHILDREN ;
LET THE SUN , THE STARS , THE MOON AND THE BLUE SKY
AND THE GREEN EARTH WITH ALL ITS FLOWERS AND FRAGRANCE
AND THE SOFT BREEZE WAFTING WITH ITS WORDS OF LOVE ,
THE SWEET MELODIES OF BIRDS , EVERYTHING KISS MY CHEEK
TO BID ME FAREWELL ON MY JOURNEY BEYOND THE SHORES OF LIFE !
COMMAND YOUR MESSENGER TO LEAVE ON MY FACE
A TINY STREAK OF A SMILE AND A SOFT GLOW OF PEACE
AS MY AUTHENTICATED SIGNATURE OF HAVING LIVED A FRUITFUL LIFE !


--SUNDARAM CHANDRAKALAADHAR

Saturday, November 2, 2013

" பிக்ஷாம் தேஹி ..!"
&
தீபாவளி ...
நம் குழந்தைகள் ...எங்கும் எவரும் புதிதில் புன்னகையில்--
பார்த்தவுடன் மனம் நிறைகிறது ..பின் நிழற்படங்கள்   என நாள் தொடர்கிறது
வெடிக் குப்பைகளின் சிதறல்போல் எங்கும் ' இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ' காற்றில் கணினியில்  இறைந்துகிடக்கின்றன ..
 
ஆனால்  மனதில் ஏதோ விடாது  உறுத்தும் நெருடல் எனக்கு .
மனம் பின்னோக்கி சப்தமின்றி வழுக்கிப் போகிறது .
என் பால்ய முதல்நிலைப் பள்ளிப் பருவம் .....
சின்னப் பருவத்தில் நெஞ்சில் ஆழப்படிபவை அழியாச் சிற்பங்களாகின்றன;
ஆனால் எப்போதும் நம்முடன் அந்தரங்கமாகப் பேசும் ஆற்றல் பெறுகின்றன .
படிந்த நாள் முதல் மடியும் நாள் நொடி வரை நம்மோடு வாசம் செய்பவை .
இதோ காட்சி விரிகிறது --
 
அன்று என் பெயர் சந்திர மௌளி.
 
என் வகுப்பில் முத்துவெங்கட்ராமன் --
என் ஆரம்பப் பள்ளித்  தோழன்...அவன் தம்பி மீனாக்ஷி சுந்தரம் .
அவர்கள் தாய் லலிதா மாமி ...தந்தை திரு. சிவராமன்
நாங்கள் வாழ்ந்த உத்தமபாளையம் [ இப்போது தேனி மாவட்டம் ] அக்ரஹாரத் தெருவில் ஏழைக் குடும்பங்கள் ஒண்டி வாழும் பிறை வீடுகளில் ஒன்றில் அடக்கமாய் வாழ்ந்தனர் .
வறுமை ..வறுமை
தாய் அத்தெருவில் பிராமணர் வீடுகளில் அவ்வப்போது நடக்கும் விசேஷங்களிலோ , திதி எனப்படும் ஆண்டு தவசங்களிலோ அழைக்கப்பட்டு உழைத்து சிறு ஊதியம் பெற்று வருவார்கள் ,.
தந்தையார் பேசி நான் கேட்டதே இல்லை ...
ஒரு ஜீவனால் இத்தனை மௌனம் காக்க இயலுமா என  என் சின்ன வயதிலேயே நான் வியப்பாய் வெளுத்ததுண்டு .
எவர்க்கும் தீங்கிழைப்பவரோ எவரோடும் சண்டை போடுபவரும் இல்லை .
ஏதோ ஒரு பணக்காரர் வீட்டிலோ ,கடையிலோ கணக்கு எழுதி எளிய வருமானம் அடைபவர் .
தெருவில் நடக்கையில் அக்கம் பக்கம் திரும்பாது சற்றுக் கூனல் முதுகினராய் அதே மௌனமாய் ..!
நான் அவரை சந்தித்ததோ பேசியதோ இல்லவே இல்லை
ஆனால் அதுவே இன்று வரை என் மாளாத பெரும் வருத்தம் .
எப்படி நான்கு ஜீவன்கள் நாளை நகர்த்தினார்கள் ?
தாயும் தந்தையும் நல்ல ஆடை அணிந்து நான் பார்த்ததே இல்லை
அப்புறம்தானே அணிகலன்கள் ..கழுத்து மூக்கு மூளிதான்
மஞ்சள் தாலியே வாழ்வின் பிடிப்பாய் ..
இதை எழுதுகையில் நான் சொட்டச் சொட்ட அழுகிறேன் என்பது என் கணினி தலையில் அடித்துச் சத்தியம்
என் எழுத்துக்களுக்கு நான் அழுகிறேனா......என் இயலாமைக்கு அழுகிறேனா ?...அவர்களை என்றும் காணாத தவிப்பில் அழுகிறேனா ?...என்று எனக்கு அடையாளம் காட்டத் தெரியவில்லை .
தாய் லலிதா மாமியின் ஏக்கம் நிறைந்த பசிக்கும் விழிகளின் தாக்கத்திலிருந்து நான் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தப்பமுடியாது .
மானசீகமாக என் மற்றொரு அன்னையாகவே என் மனதில் வடித்திருந்தேன்
இன்று இதனை ஏற்றிச் சொல்லவில்லை ..அன்றே நான் என்னுள் கரைந்து கொண்டிருந்தேன் .
 
&
 
பள்ளி காலை வகுப்புகள் முடிந்து மணி அடிக்கிறது .
ஒரு மணி நேர இடைவெளி இருக்கும் .
எல்லோரும் பள்ளி வாசல் பீறிட்டு 'ஹோ ' விட்டு வீடு பறக்கிறோம் .
வந்த சிறிது நேரத்தில் தட்டு வைக்கப்பட்டு அன்னை பரிமாறுகிறார்கள் எங்களுக்கு .
 
அப்போது வாசலில் ---
" பிக்ஷாம் தேஹி '...என்ற தாழ்ந்த குரல்
இதற்கு ' பிச்சை இடுங்கள் ' என்ற இரக்கமற்ற பொருள்
கண்ணியமாகச் சொன்னால் ' அன்னம் இடுங்கள் ' என்றோ அல்லது ' உதவி செய்யுங்கள் ' என்றோ கொள்ளலாம்
அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் என் நல்ல நண்பன் ...என் அருகில் அமர்ந்திருப்பவன் ..முத்துவெங்கட்ராமன் .
இடுப்பிலே ஒரு முண்டு ..குறுக்காய் ஒரு பூணூல் ..நெற்றி நிறைய முப்பட்டையாய் திருநீறு
தீச்சட்டி ஏந்துவதுபோல் ஒரு துணியால் மூடிய பாத்திரம் .
தலை குனிந்து நிற்கிறான்
அம்மா அவனை கதவு திறந்து கூடம் அழைக்கிறார்கள் .
உள்ளே சென்று ஓர் தட்டில்  அன்னம் எடுத்து வந்து அதில் சேர்க்கிறார்கள் .
எங்கள் கண்கள் சந்திக்கின்றன ஒரு சில நொடிகள்
அவன்  விழிகளில் பொறாமை இல்லை ...ஏக்கமும் இல்லை .
பழகிப் போனது இதுதான் வாழ்க்கை என்று ..ஏற்றுக் கொண்டு விட்டனன் .
ஆனால் நானோ ?
ஏனிந்த ஏற்றத் தாழ்வுகள் அட இறைவா என்று என்னுள் எரிகிறேன்
ஒவ்வொரு நாளும் இது தொடரும் ..
அவன் என்றாவது வராவிட்டால் அன்று என் மனம் படும் பாடு !
 
&
 
காலம் இடைநிலைப் பள்ளியில் எங்களைப் பிரித்து விட்டது
ஏழ்மையால் படிக்கவில்லையோ ?
ஏழ்மை அவனை ஏதோ வேலையில் தள்ளி விட்டதோ என்னவோ .
 
&
 
நான் படித்து வேலையில் எங்கே அலைந்தாலும் முத்துவெங்கட்ராமன் என் மன மூலையில் !
பல ஆண்டுகளுக்குப் பின்தான் உத்தமபாளையம் என்னால் செல்ல முடிந்தது .
நான் அங்கு செல்ல எண்ணியதற்கும் அவன் ஒரு காரணமாவான் .
அவன் தம்பி அவ்வூர் ஞானாம்பாள் கோவிலில் ஒரு அர்ச்சகராக இருந்தான் என்று இடையில் யாரோ சொன்னது ஒரு காரணம் .
அவ்வீதி வழி சென்றேன் ..அந்த 'ஸ்டோர் ' என அந்த குடித்தனங்களை அன்று அழைப்பர் ..அதையே காணோம்
வேறொன்று மிடுக்காய் அங்கே எழுந்திருந்தது
கோயில் சென்றேன் ...அவன் தம்பி பற்றி விசாரித்தேன்
அர்ச்சகர்கள் எவருக்கும் தெரிய வில்லை
காலம் அவ்வூரில் ஓர் ஏழையின் சுவடுகளை அடியோடு அழித்து விட்டிருந்தது
 
&
 
காலமே ! நீ என்னிடம் தோற்பது உறுதி
என் முத்துவெங்கட்ராமன்  என் இறுதி மூச்சு வரை என்னுடன் இருப்பான் .
காற்றே !
என் தேடலின் குரலை எங்கிருப்பினும் அவனிடம் சேர்ப்பாய் !
அவனிடம் பேச வேண்டும் !
என்னால் முடிந்தது உதவ வேண்டும் இன்றாவது
அவன் சந்ததிகளுக்காகவாவது .
 
---சந்திர கலாதர்
03.11.2013 / ஞாயிறு / ஐப்பசி 17 / காலை 9.30 மணி  
 
இந்த என் பெரிய அக்காவின் திருமணப் போட்டோ ...அதில் முகம் காட்டி ...இன்று  என் நினைவிற்காக அன்று நின்றானோ என்னவோ தெரியவில்லை ..அவன்தான் என் எளிய நான் தேடும் நண்பன் முத்து வெங்கட்ராமன்      
 

Sunday, September 15, 2013

sitting on a high friendless summit in yogic meditation
let me not commit the blunder of  sermonizing
in endless streams , gloating inward my fancied infallibility --
but accept myself with all the human  weaknesses 
and observe this world in unbiased vision
and cleanse first myself of all my infirmities
though both  near impossible in application ;
my deficiencies ,though huge . escape detection by my intellect
and my blissful ignorance of my glaring discordant notes
would never make me a saintly soul to reel off  sermons--
bless me , o lord , not to make my life bristle  with riddles
but make it as simple and honest as feasible .;
help me in my efforts to make myself a flute
rather than an instrument with a thousand taut strings --
lend me your grace , o god ,to breathe through these holes
of my inherent deficiencies a stream of soulful music;
let my brethren feel that my songs are also theirs
and not look up  at my false glows with reverence .
grant me this boon that I may be true to myself .
 
----sundaram chandrakalaadhar
16.09.2013 / Monday / 2 a.m.

Monday, July 1, 2013

அன்றோர் நாள் முதிய அன்னைக்கோர் கடிதம்

அன்றோர் நாள் முதிய அன்னைக்கோர் கடிதம்
&
எனது அன்னையாருக்கு அவர் 93 வயதை எட்டிப் பிடிக்கையையில் [1999] மதுரையில் அவரைப் பார்த்து வந்தபின் நான் எழுதிய கடிதத்தின் சில பகுதிகள் ...என் அன்னை மறு ஆண்டு இறைவனடி [2000] சேர்ந்து விட்டார் --

Tuesday, June 11, 2013

நடராஜனே !
என் மீது நின்று ஆடும்
ஒரு கால் நடம் போதும் !
வலிக்கிறது இடுப்பு
சற்றே இறங்கி நட ராஜனே !
அகில அண்டங்கள் தாங்கும்
உன் சுமை என் எளிய மேனி
எப்படித் தாங்கும் அறிகிலையோ ?
உனக்கோ இது ஆனந்த நடனம் !
கூத்தின் வேகத்தில் கூந்தல் நேர் நிற்க
கச்சை காற்றில் அலை பாய
நாகங்களும் கூடக் களித்தாட
நான் மட்டும் உன் குதிகளில்
வலிகளின் திருகலில் நையவோ ?
வாழ்க்கை நோகுதைய்யா !
உன் ஆனந்தப் பெருக்கினில்
ஒரு துளியேனும் இவ்வாழ்வில்
எனக்கும் தந்து அருள் செய்வாய் !

----சந்திர கலாதர்
11.06.2013 / செவ்வாய் / வைகாசி 28
காலை 5 மணி /விஜய ஆண்டு


Thursday, May 2, 2013

may be he is thirty-five years old
he is dressed in crumpled boyish shorts
and a loosely hanging crease-less shirt
with the upper chest carelessly open
and his unkempt tress foolishly cut
bulging unclean eyes and pouting lips
with ungainly steps of his knotted knees
protruding teeth and a swelling belly --
with a small vessel in one hand
emitting a loud fitful laughter
all his way to the tea-shop --
he harms none ,talks with none
but who ignites his laughter sparks ?
seems immensely blissful
as he heartily laughs , caring not
this earth and our minds he treads on !
he cannot speak but a few words
that too with a pathetic stammer--
he sits at the gate of my apartment
cross-legged like a hapless school boy
witnessing the world as it hurries past him -
time does not perturb or disturb him
from morn to midday , scorching the sun !
a sympathetic call of a passer-by
meets with the never-changing complaint
'he beats me ..he throws stone at me !'
and he is satisfied with
' worry not ,I will punish him !'
and he wears the day and everyday --
even a kid smells his unsoundness of mind
and jeer at him as they pass by --
I see him for the past twelve years in my street
I am told that he was married to a girl
who ran away once for all leaving him on the roads - 
o god , why this defective creation ?
why this half-hearted attempt ?
he has a younger sister who is still worse
and another sister suffering from polio
I pity their hapless mother
who takes her daughter along the streets
twice a day shrinking her soul in utter shame -
could there be anyone suffering more fate ?
the world rolls on its circular brim
casting never a look on this pitiable mother !
--
S.CHANDRA KALAADHAR
02.05.2013 / Thursday / chiththirai-21 / 9 p.m.

Monday, April 15, 2013

கவிதை என்னுள் இளம் வயதில்
எட்டாத தொலைவில் மறைவாய் நின்று
மெலிதாய் 'வா வா ' என்று அழைத்ததோ ?
பசிய மண்ணும் நெடிய விசும்பும்
காற்றும் மழையும் மரமும் புள்ளும்
நானே அறியாது தோழமை கொண்டவோ ?
வாலிப வயதில் முச்சந்தியில் முட்ட
படிப்பு , ஓவியம் ,கவிதை கைகாட்டிகள்
பாவம் என்னை வெகுவாய்க் குழப்பின -
படிப்பைத் தேர்ந்தேன் ஒருவாறு முடித்தேன்
விடாது தொடர்ந்தனள் ஓவியப் பெண்ணாள்
அவள் மையலில் வீழ்ந்தேன்
மடியில் கிடந்தேன் கனவுகள் பொரித்தேன்
காகிதம் சுவர் என வண்ணத்துள் திளைத்தேன்
ஓவியம் காதலில் களைத்தாள்
கவிதையாள் குரல் நெருக்கமாய்க் கேட்டது
அவள் இலக்கண நகை கண் கூசியது
நகைதனை நீக்கி நகையோடு வா என்றேன்
அப்போதுதான் அவள் முழு நிலவானாள்
உன் அழகு நான் இல்லை, எப்படி என்றேன் ?
தரிசாய்க் கிடக்குதே என் மனம் என்றேன்
எங்கிருந்தோ ஏதோ என்முன் குவித்தாள்
கூர் முனை ஏர்களாய் உலகக் காவியங்கள்
பட்ட நிலத்தை பொன் ஏர்களால் கீறினேன்
உயரிய கருத்தை உரமாய் இட்டேன்
கற்பனை கொண்டு ஈரப் படுத்தினேன்
உண்மையை தேடி விதைகளாய் இட்டேன்
நம்பினால் நம்புங்கள் இது சத்தியம் ஆகும்
முதல் ஓர் கவிதை கோர்க்கும் முன்பு
ஓர் பத்தாண்டுக் காலம் ஓராயிரம் நூல்கள்
ஓர்ந்து படித்தேன் மகிழ்ந்து கற்றேன் .
ஓர் கவிதையும் கூட பிறர் படைத்தன
மிஞ்சாது போயினும் தாழாது என்ற உறுதியில்
ஒவ்வொன்றாய் என் படைப்புகள் கண்டேன்
நானே இலக்கணம் மீறிய படைப்பு என்பதால்
உணர்வை முன்வைத்தே கோலங்கள் எழுதினேன்
அழுதேன் சிரித்தேன் கலங்கினேன் குழம்பினேன்
வெற்றுக் கூச்சல் வெகுவாய் வெறுத்தேன்
கொஞ்சம் கொஞ்சமாய் குவிந்தன எழுத்துக்கள்
ஒன்று இரண்டு நூல்களும் ஆயின
நொண்டிக் கால்களைக் கடன் கேட்கவில்லை
என்னுரை மட்டுமே என்னோடு நடந்தது
உள் ஆசை ஒன்று தீயைக் கனன்றது
இவன் கவிஞன் என்று பிறிதோர் கவிஞன்
குறிப்பிடக் கேட்கக் கொள்ளாத ஆசை
பாவலன் என்றும் சொல்லக் கேட்டேன்
இருப்பினும் என் ஆங்கிலப் படைப்பை
ஒரு ஆங்கிலக் கவி மெச்சக் கேட்க
தணியாத தாகம் ; பொல்லாத ஆசைதான் !
ஓ ஓ ! அவையும் மெதுவாய் என் கரை சேர்ந்தது
'sweet poet ! brilliant poet !' என்பன எல்லாம்
என் கவிதைக் காதலின் பரிசெனக் கொள்வேன் .
ஆம் ,இதனை அடைய எத்தனை தூரம்
தளரா நடை தனி வழி சென்றேன் !
&
ஒன்றை மட்டும் நினைவில் செதுக்கினேன்
இது இயற்கை அளித்த பிச்சை ஆகும்
என் திறம் என்பது எதுவும் இல்லை !
கவிதை என்பது காற்றாய் வருவது
பலூனுள் ஊதி அடைப்பது அல்ல !
---சந்திர கலாதர்
15.04.2013 / திங்கள் / சித்திரை 2 / விஜய
இரவு மணி 11.

Sunday, April 14, 2013

the four walls wrap me tight
loneliness burns my mind
darkness drenches
sweats of dejection
sink my soul
void fills my thoughts --
no more no longer ;
must i escape into the vast space
meet my clouds
and have fun with the winds
the evening has risen
the sun has yellowed and mellowed
from heaven and earth .
i must read my message !
o mind ,gain your wings
and shatter the doors
with a powerful bang --
the call is strong
and feverish is its pitch !
--
S.CHANDRA KALAADHAR
15.04.2013 / monday
03.a.m./vijaya /chiththirai 2

Wednesday, February 20, 2013

in hot pursuit of my sweet sparrow !
&
my handy cam was restless and hungry
smacking its lips for the choicy nature dishes--
the pinch was too much to bear
and i set out my journey to bangaluru
from the cursed chennai devoid of cute little birds
to the blessed bangaluru's cool climes
where thrive all sweet songsters
in their joyful flights in the sporting winds !
who marks the microwave towers
as the villain of peace that drove mercilessly
the ever agile and ever brisk house sparrows ?
then how can it thrive and flourish in gleeful gangs
in bangaluru where towers outwit even the crafty crows ?
could there then be a curse on the cauldron chennai ?
must be the perennial pricks from the sea of crows ?
two happy days in the serene skies of bangaluru !
and my handy cam was overfed with the juicy nature !
bangaluru is a bird-heaven
the sky is decorated with the formations of
the disciplined flights of cranes and storks --
o what a treat to watch the young skies
with wave after wave of these wonder birds
weaving delectable ever-changing patterns
that raise 'aahaa's in your heart !
can a flight itself be a melody or music ?
yes, yes , it can be to the whole body and soul !
and the graceful raiding flights with alert looks of
the urban kites and vultures in their broad powerful wings
circling the heavens at majestic heights
with delicate manoeuvring of their tails and wing tips !
the tiny sparrows in small bands
with the black-banded males calling sweet names
of their beloveds in ' chweet- chweet ' language,
restless to park their spirits at a spot not more a second !
i am the heaven's blessed soul
to have the birds amidst me
in their happy flights of unbridled freedom
serenading their songs in total abandon
all for me and for me alone !
strange birds present themselves in their full glory
for a fleeting moment to surprise and gladden me !
i am not the mindless man
to cage the tiny hearts with their bursting melodies
to crash their hearts in painful cries
slamming their chests against the rock- hearts
that cage their songful-spirits for their vulgar joys !
o my loving birds , soar high and higher up in skies
criss-cross the heavens in brilliant colours
and pour out your souls on this hungry heart
and feed with the splendour my ever-hungry cam !
---s.chandra kalaadhar
20.02.2013 / wednesday / maasi 8 / 12 noon

Monday, January 14, 2013



why should it happen ..?

&

why should it happen like this ?

why should there be such a rush

of unstoppable streams

of thoughts and fancies

into me and out of my core ?

why am i drifting away from close ones

and closing in on others and strangers?

which tide tosses me into realms unfamiliar ?

why mysterious sounds and strange silences

encircle me sucking me in their vortex

and ejecting me out with powerful kicks ?

why is my soul visited by holy spirits

in such a quick succession

spraying me with the fragrance of heavens ?

in which powerful energy's inescapable swirl

have i been caught and entangled ?

my thousand voices rise in waves

crying loud for merciful looks !

o god , it is your matchless boon-

the unending shower of thoughts-

that keep my spirits alive and high !

dispel my fear that soon

you may suck me dry and throw me lifeless

in an unfriendly desert !

o merciful it is my desire

i should die a poet

breathing out my last poem

in honour of the 'nature '!


---s.chandra kalaadhar

14.01.2013 /monday / thai 1 / 10 p.m.
See more

Tuesday, January 1, 2013

காற்றே நீ தான் ...!


 &

நிலம் நீரால் துண்டிக்கபடுகிறது
...
காற்றே நீதான்

எவற்றாலும் துண்டிக்கப் படவில்லை

உலகெங்கும் வானெங்கும்

எப்போதும் சுற்றித் திரிகிறாய் -

உன்னை நான் என்னுள் உயிர்க்கையில்

எங்கோ என்னவளின் உள்ளிழுப்பே

நெஞ்செல்லாம் நிறைக்கிறது-

அவளைத் தொட்ட நீயே

இதோ என்னையும் தழுவுகிறாய் -

அவள் மொழிகளைக் காதில்

காதலாய்க் கிசுகிசுக்கிறாய் --

ஒரு கரம் என் மீதும்

மறு கரம் அவள் மீதுமாய்

ஆதரவாய்ப் படர்கிறாய் --

அவள் உணர்வின் நறுமணம்

உன் சிறகில் எனை நிரப்புகிறது -

உன் மெல்லிய நரம்பிழைகளிலும்

அவளுக்காக இசை வருடுகிறேன்--

என் நெஞ்சு கனவுகளால் கனக்கிறதே

அவளிடம் உன்னால் சுமக்கக் கூடுமா ?

காற்றே உன்னைகூட இன்று

உருவாய்ப் பார்க்க முடிகிறதே -

அவள் பார்வை ஒளி படர்ந்து

நீ சந்திர காந்தம் பெறுகிறாயே !

---சந்திர கலாதர்

02.01.2013 / புதன் / மார்கழி 18

காலை 9.30 மணி

Tuesday, December 11, 2012

கவிதைப் புயல் பாரதி

&

அன்று --
குண்டும் குழியுமாய்
முட்டி மோத வைத்த
தமிழ்ச் சாலையிலே
இவன் --
தீயினைத் தேராக்கி
விழியினை வில்லாக்கி
மின்னலை அம்பாக்கி
இடிகளைச் சொல்லாக்கி
புரட்சி மழையாய்
மடமை இடிக்க வந்தான் !
அடிமைக் குடிமையை
அடியோடு தகர்த்திட
ஆவேசம் கொண்டு
இவன் --
கவிதைப் புயலானான் !

ஆனால் --
இயற்கை தொட்டதும்
இறக்கை விரித்துப்
பூக்கோலம் பூண்டு
தென்றலாய்த் திரிந்திருந்தான் !
குழந்தை முத்தமாய்
தமிழ்ச் சொற்களால்
தழுவி அணைத்திடுவான் !

இவன் ஒருவன்தான் --
நாக்கோடு நெஞ்சையும்
நடையோடு உதட்டையும்
இணைத்துப் பிடித்த
பித்தன் என்றானான் !

அவன்தான் --
பாரதி !
பா ரதி!
பார் அதி 

பாரதி !
இவன் பாக்களோ
அழகு ரதி !

இவன் நெஞ்சிற் சுமந்ததோ
தீ !

இவன் பாடினால்
பார் அதிரும் !

இவனைப்
' பார் அதி 'நேரம் எனக்
கெஞ்சும் நம் விழி !

----சந்திர கலாதர்.
' ப்ரிய ரூபங்கள் '1993
என் கவிதைத் தொகுப்பில் 

Friday, December 7, 2012

i lazily turn the pages -
 
it is the concise English dictionary ;
 
the last page says "550 sir ! " in mini voice ;
 
i make a measure of me -
 
would i have garnered words worth
 
at least 50 pages' space
 
in all these 50 years
 
of my international-marriage
 
to this bride from foreign shores ?
 
strongly doubt even this humble measure !
 
do i know the full depth and width and confident ride
 
of each word within this beggarly ambit ?
 
again a giant 'no ' with a drooping head !
 
what courage then have i
 
to express my thoughts --
 
that bloom with all fluorescence and fragrance
 
in the poetic gardens of my native tongue --
 
in this poorly acquired overseas skill ?
 
yet i do ,hoping some forbearing souls
 
beyond the roaring seas and mighty mountains
 
would tune their sensitive ears
 
to the central throbs of this heaving heart !
 
 
 
----s.chandra kalaadhar
 

Sunday, December 2, 2012

as none other will listen me in silence

god ! whoever or whatever may you be
make my life simple
thoughts noble
speech striving towards truth
heart rushing to help the needy
head neither bloated nor depressed
mind never treating another
inferior or bankrupt of talent--
a resolve to walk alone
the path of righteousness against odds
a desire not exceeding my needs
a belief just capable of consoling my grief
and putting me back on life's unending stream !
god, i know i come to you with tears and pains
not in the hope i will see light
but to unburden my heart of my grief
as none other will listen me in total silence.

---s.chandra kalaadhar.
02.12. 2012 / sunday
 

Monday, November 19, 2012

 
ஒரு முதிய மரம் அலுத்துக் கொண்டது --
 
" வயசாகிப் போச்சு
 
வெயில் மழை காத்து எதுவும் தாங்க முடியல
 
மூட்டுக்கு மூட்டு ,கிளைக்குக் கிளை வலிக்குது
 
பறவைகளைச் சுமக்கிறது கூடச் சிரமமா இருக்கு
 
அப்பறம் எங்கே காய் கனி சுமக்கறது ?
 
அடிபடறது போ ?
 
காலேல தல விரிக்கறதுக்கே சோம்பலா இருக்கு
 
பாரு தலைவேற நரைச்சுப் போச்சு
 
கொட்டியும் போச்சு
 
பிள்ளைகுட்டின்னு சுத்தி எத்தனை இருந்து என்ன சொல்ல ?
 
ஏதும் சீந்தறது இல்ல..
 
ஒரு புயல் வந்தாப் பரவால்ல போலருக்கு
 
அப்பாடான்னு பெருசா ஒரு கூச்சல் போட்டு விழுந்துடலாம் போலருக்கு.
 
பாத்ததெல்லாம் போதும் சாமி
 
என்னிக்கு என் கணக்கு முடிப்பானோ ..தெரியலையே
 
என்ன சொல்லி என்ன ?
 
தற்கொலை பண்ணிக்கலாம்னு விழப் போனாலும்
 
இந்த மண்ணுக்குள்ளேந்து ஆச வேர் விடமாட்டேங்குது
 
உஸ் ..உஸ்ஸ் ..உஸ்ஸ் ! "
 
 
பக்கத்து இளைய மரம் -
 
 
" ஏன் பெருசு இத்தனை அலுப்பு ?
 
உன் வயசுக்கு நல்லாத்தான இருக்க ..! " என்றது
 
 
 
பெருசுக்கு இப்போ பாராட்டுல இளமை திரும்பிடுச்சி
 
 
" போடா போக்கத்த பயலே
 
உன் வயசுலே எந்தக் காத்துக்கும் அசரமாட்டேன்
 
உடம்பையே வில்லா வளைப்பேன்
 
தரைய உச்சாணிக் கொப்பால முத்தம் குடுத்து
 
அம்பா மேல வருவேன்
 
புயலு கூட அப்பால மருவாதையா ஒதுங்கிப் போகும்
 
உடம்பெல்லாமே பூவா , காயா ,கனியா
 
தேனடை மாதிரித் தொங்கும்
 
பசங்க கல்லைத் தூக்கறதுக்கு முன்னயே
 
தலய சின்னதா ஒரு சிலுப்பு சிலுப்பி
 
கீழ கொட்டிப் பரப்பிடுவேன்
 
பசங்கல்லாம் மடிதாங்காம அள்ளிக்கிட்டு
 
நல்ல மரம்டா ன்னுட்டுப் போவானுங்க -
 
இதைச் சொல்ற ,
 
பத்தாயிரம் பறவைங்க கூடி ஆடி
 
ஒரே சந்தோஷமா விளையாட்டும் கேலி கூத்துதான்
 
அந்த பாட்டுக் கச்சேரி ஓயவே ஓயாது போ !

அந்த சங்கீதம் வேற
 
இப்பவும்தான் சுத்திக் கார்போற இரச்சல்
 
ஒய்வு ஒழிச்சல் இல்லாம ''
 
நம்ம பேசற சத்தம் நமக்கே கேக்காம காதே போயி ..
 
அப்போல்லாம் ஒண்ணுரண்டு பஸ்சு வரும்
 
'பாம் பாம்'ன்னு ஊதிக்கிட்டு
 
அது கேக்கறதுக்கே சந்தோஷமா
 
நம்ம வீட்டுப் பிள்ளைங்க வர்ற மாதிரி ..
 
இப்போப் பார் மேலயே கறுப்பாப் போச்சு
 
புகை அடிச்சு அடிச்சு
 
நாம பச்சைங்க்றதே மறந்து போச்சே
 
போதாதுக்குத் தூசி புழுதி வேற -
 
அப்பல்லாம் நம்ம மேல மஞ்ச குங்குமம் தீட்டி
 
சாமி கணக்கா கும்பிட்டு வேண்டிகிட்டுப் போவான்
 
இப்ப விழிப்பா இருக்கும்போதே
 
ஒரு கையை வெட்டி வண்டில போட்டுப் போயிடறானுங்க
 
இல்லாட்டி குப்பைய அடிலபோட்டுத்
 
தீயை வச்சிட்டுப் போறானுங்க
 
இல்லாட்டி ரோடு போடறேன்னுட்டு
 
வேரைச் சுத்தித் தாரை ஊத்திட்டு
 
தாகத்துக்கு மழைத் தண்ணி கூடக் குடிக்க விடா
 
சாக அடிச்சு அதைச் சாக்காக்கி
 
வெட்டி வித்துடறான்
 
ஒண்ணொன்னாக் காலி பண்ணி
 
பேசறத்துக்கு பக்கத்துல சாதி சனமே இல்லாமப் பண்ணிட்டான்
 
பாரு சோத்துக்கு செத்து எலும்பா
 
நீங்கள்ளாம் இளவட்டமா ?
 
பாத்து புழைச்சுக்கங்கப்பா !
 
 
இளமரம் நிதர்சனம் கண்டு கேட்டு
 
அசந்துதான் போனது !
 
 
---சந்திர கலாதர்
 
19.11.2012 /திங்கள் / கார்த்திகை 4
 
 
பகல்
 
 S.CHANDRA KALAADHAR

Saturday, November 17, 2012

 
விண் பார்த்தால்....! .
&
 
புலராத மொட்டுக் காலை
 
' ச்ச்சில்' லின் ' கட்டிப் பிடிப்பு
 
கார்த்திகைப் பிறப்பே இப்படி எனின்
 
மார்கழிப் பனிக் கடி எப்படி இருக்கும் ?
 
மொட்டைமாடி -
 
இதற்கு இதுவே பொருத்தம் ;
 
வேறு வார்த்தைகள் அல்ல !
 
கார் நீல வானம் --
 
உச்சிமேடுகளில் பதித்த வைரங்கள் -
 
விண்ணைப் பார்த்தால்
 
என்தந்தையே எங்கும் விண்மீன்களாய் !
 
எவ்வளவு அக்கறையுடன்
 
என் பள்ளிப் பருவத்தில்
 
குளிர் வானில் கும்மிருட்டில்
 
நடுங்கும் நக்ஷத்திரங்களை
 
என் இடுக்கிய விழிப் பார்வையோடு
 
தன சுட்டுவிரல் கோர்த்துக் காட்டி
 
என்னை நண்பன் ஆக்கினார் .
 
" இதோ அந்த வீனஸ் அல்லது சுக்கிரன்
 
விடிவெள்ளியாய் , குத்து விளக்காய் --
 
அதோ பார் --
 
நாய் நக்ஷத்திரம் ' சிரியஸ் '
 
மிக அருகாமை விண்மீன் -
 
அது ஓரியன் எனும் வேடன்
 
இழுத்துச் செல்லும் நாய் ஆகும் !
 
ஓரியன் இடைக் கச்சையில்
 
மூன்று நக்ஷத்ர உடைவாள் --
 
அதோ தெற்கே -
 
அடையாள விண்மீன் தொகுதி
 
'சதர்ன் க்ராஸ் ' சிலுவைபோல்
 
நான்கு நக்ஷத்திரங்கள்-
 
கண்ணுக்கு எளிதில் புலப்படா
 
ஆறு கிருத்திகை விண்மீன் தொகுப்பு .--
 
இதோ வடக்கில் 'க்ரேட் பியர் '
 
ஏழு விண்மீன் தொகுப்பாய் --
 
அதன் முன்பக்க இரு மீன்களை
 
மனதுள் சேர்த்து கீழ் இழுத்துப்போ -
 
தொலைவான் தொடுவில்
 
மங்கலாய் ஒரு நக்ஷத்திரம் ,தெரிகிறதா ?
 
ஊன்றிப் பார் -" என்று என் உயரம்
 
சளைக்காது குனிந்து நிமிர்ந்து
 
அந்த ' போல் ஸ்டார் ' எனும்
 
துருவ நக்ஷத்ரம் பறித்துக் கொடுத்தீர்களே !
 
" அப்பா இது இடம் பெயராது
 
இது வைத்தே மாலுமிகள் தொன்று தொட்டு
 
 
வட திசை கண்டு பிற திசை பொருத்தி
 
கடற் பயணம் செய்தனர் ;
 
அதோடு இந்த அச்சைச் சுற்றியே
 
நமது பூமி சுழல்கிறது
 
அதனால் எல்லா நக்ஷத்ரங்களும் கூட
 
இது அச்சாக்கிச் சுழல்வதுபோல் தோன்றும்
 
அதோ உச்சிவானுக்கு ஓர் கச்சை போல்
 
வழியில் சிந்திப் போன பால் போல்
 
கோடிக் கோடியாய் மாவுச் சிதறலாய் 
 
அதுதான் 'மில்கி வே ' எனும் ' பால் வீதி '--
 
தென்மேற்காய் வண்ணங்களை
 
உமிழ்ந்து பளீரிடுகிறதே
 
அதுதானப்பா 'வேகா ' விண்மீன்
 
தேள்கொடுக்காய் விருச்சிகன்
 
எனும் 'ஸ்கார்பியோ ' தொகுதி

'லிப்ரா ' என்னும் ' துலாம் ' " என்றபடி
 
மார்கழி மாதம் வெவ்வேறு நேரங்களில்
 
அந்த உத்தமபாளையத்து
 
இருள் கிராமத்து வீதியில்
 
ஒளிர் வானத்து அதிசயங்கள் அனைத்தும்
 
பன்னிரெண்டு ராசிக் குழுமங்களும்
 
குழந்தை ஆவலுடன் எனை எழுப்பிக்
 
கற்றுத் தந்த பாடம்தான் மறக்குமா ?
 
உங்கள் அன்புதான் தோற்குமா ?
 
பின்னாளில் நான் படிக்கும் இடங்களில்
 
பணி புரிந்த ஊர்களில் எல்லாம்
 
விண்ணின் வரைபடமும் டார்ச்சும்
 
அருகில் கொண்டு பனித் தூவலில்
 
கோரைப்பாய் மீதில் மல்லாத்தி
 
விண்ணை விழிக்குள் வரைந்து
 
பெயர்தேடித் திரிந்ததெல்லாம்
 
நனைந்துபோன தலையணை மறக்குமா ?
 
மார்கழிகள் தான் மறந்திடக் கூடுமோ ?
 
" அதனால் தானப்பா கண்ணன்
 
மாதங்களில் நான் மார்கழி என்றான் "
 
என்று கற்பித்த தந்தை மறப்பேனோ ?
 
 
---சந்திர கலாதர்
 
18.11.2012 / ஞாயிறு /
பகல் மணி 10.30
--
S.CHANDRA KALAADHAR

Thursday, November 15, 2012


ஐம்புலன்கள் ஐம்பூதமுடன்


அனுதினமும் ஆசையோடு
 
 

பேசும் ஒரு ஊமை மொழி
 
 

எனக்குள் அது ஒரு சுக ராகம்
 
 

எழுதுகையில் புரண்டுவரும் ஜீவ நதி
 
 

என் மொழியும் அதன் மொழியும்
 
 

சங்கமிக்கும் வான்வெளி புனிதத்தலம்
 
 

பார்த்தவுடன் புன்னகைக்கும்
 
 

மெதுமெதுவாய் இதழ் மலர்த்தும்
 
 

இதய மொழிகளையே
 
 

மௌனமாய் அனுப்பி வைக்கும்
 
 

உணர்வுகளைத் தட்டி எழுப்பும்
 
 

சொற்களை அன்பாய் ஊட்டிவிடும்
 
 

அள்ள அள்ளக் குறையாத
 
 

கற்பனைகள் கோடி தரும்
 
 

காற்றாய் ஓடி வரும்
 
 

கன்னத்தில் முத்தமிடும்
 
 

கட்டிப் பிடித்து காதோரம் கிசுகிசுக்கும்
 
 

காத்திருக்கும் ஓரமாய்
 
 

வெண் மேகங்களாய்
 
 

பொதி பொதியாய்
 
 

வண்ணங்கள் பூசிக்கொண்டு
 
 

மங்கலமாய் மனம் கேட்கும்
 
 

பறவைகளைப் பறக்கவிட்டு
 
 

ஆனந்தச் சாரலிடும்
 
 

இரவெல்லாம் எனை காணாது
 
 

காத்திருந்த கண்ணீரை
 
 

பச்சிலை மேல் பொறித்து வைக்கும்
 
 

தன சோகத்தைக் காலை நிலவின்
 
 

முகத்தில் பூசிச் செல்லும் ..
 
 

இயற்கையை எனக்கெனவே
 
 

படைத்தானைப் பணிகின்றேன் !
 
 
 
 
 
 

---சந்திர கலாதர்
 
 

16.11.2012 /வெள்ளி /கார்த்திகை 1
 
 

நண்பகல்
 
 

-
 
S.CHANDRA KALAADHAR

Tuesday, November 13, 2012

வயதின் நடை தளரத் தளர

பதற்றம் ஏதோ தொற்றிக் கொள்கிறது ---

உறவின் பசுமை தேடித் தவிக்கிறது

உதைத்த பிரிவை எட்டி அழைக்கிறது

இழந்தது வேண்டும் என்று கூச்சலிடுகிறது

தனிமை தனிமை என்று ஓடிய மனமும்

அண்மை நாடித் தூது விடுகிறது

ஒற்றைப் பருந்தாய் உலவிய எண்ணம்

தாழப் பறக்கும் புறா என்றானது

புதைந்த பாரம்பரியம் புதுப்பித்திடவே

கவனத்துடன் பதியம் போட்டது

சொந்தக் காற்றின் நறுமணம் நுகர

இல்லக் கதவை முழுதாய்த் திறந்தது

எல்லோரையும் அன்பால் அணைக்க

பாசச் சிறகைப் பெரிதாய் வளர்த்தது ..

------சந்திர கலாதர்

14.11.2012 / புதன் / ஐப்பசி 29

காலை மணி 8.

Sunday, November 11, 2012

எத்தனை முறை சொல்லிக் கொடுப்பது ?
அன்பாய் அடுத்து சற்று உரத்து
பின் கடுமையாய் பின் சின்னதாய்ப்
பின் மண்டையில் செல்லத் தட்டுத் தட்டி --
எத்தனை முறைம்மா சொல்வது ?
நெருஞ்சி முள் ஒளி அம்புகளாய்
'சுடீர் சுடீர் 'சிறு வெடிப்புகளாய்ப்
பூத்துச் சிதறி அச்சுறுத்தும்
கம்பி மத்தாப்புகளை முழுக் கை நீட்டி
உயர்த்தித் தொலைவாகப் பிடிக்கணும் என்று
எத்தனை முறை சொல்வது கண்ணா ?
' சுர்ர் ' என்று நுனி ஏறிப் புகை கக்கி
ஒளி கக்கிப் பின்னேகி மங்குதற்குள்
உன் கரம் தாழ்ந்து இரண்டாகக் குறுகுவதேன் ?
அச்சத்தில் உடல் நெளிவதும்
கண் இடுங்குவதும் கை உதறுவதும்
பாதியிலே ' தொப் ' பிடுவதும்
ஏற்றுகிறேன் பேர்வழி என்று
தீபம் அணைப்பதுவும்
பொறுமை இழப்பதுவும்
அடிக்கடி பதறி உள் ஓடி
கை இருப்பு பார்ப்பதுவும்
உன் பின்னாலே விடாது உளறியபடி
நான் வீணே அலைவதுவும் --
அப்பாடா காயங்கள் இன்றி
ஓய்ந்ததடா பண்டிகை நாள் என்று
கிறங்கி நான் நாற்காலி சாய்வதுவும்--
இதுதான் ஒவ்வொரு வீட்டிலும்
தவறாத தீபாவளிக் காட்சியடா !
&
----சந்திர கலாதர்
12.11.2012 / திங்கள் / ஐப்பசி 27
காலை மணி 11.

S.CHANDRA KALAADHAR