Thursday, January 26, 2012

அந்தியில் நேற்று ஓடிய சூரியன்
பொழுதெல்லாம் எங்கோ மறைவில்
செம்புழுதியில்  புரண்டு விளையாடி 
காலையில் கமுக்கமாய் கிழக்காய் நுழைந்திட 
அன்னை இயற்கை அழுத்தி பிடித்து
மேகத் தொட்டியில் அமுக்கிக் குளிப்பாட்டி 
செவ்வழுக்கு நீக்கி பொன்மேனி மீட்டனள் -
'தகத்தக' என வான் ஏறிச் சிரித்தனன்!    
 
 
--சந்திர கலாதர்       

Wednesday, January 25, 2012

long live ,my priyaa!
&
not because to-day is your birthday-
i ever remember you endearingly in heart
and keep you close to my beautiful thoughts-
it is you who are my lighthouse
standing gracefully searching me
amidst turbulent waves of misery--
for no reason my eyes gather tear-pearls
just on seeing you lighting my horizon-
to me you are the glory of the dawn
flushing the skies in rosy hues-
the droplets of dew perilously meditating
at the edge of a fragrant petal-
you are my sunset glories
plating the clouds with sheets of gold-
you are not my wealth 
as i have no affinity for the faithless money-
i ever see your loving face
on the veena and the violins you tended in youth-
i will write hundred thousand poems on you
yes,because you are my loving soul-
a father alone can feel a daughter's pulse
and i am no exception to the universal truth.
i still have with me the broken fragments of your clay models-
to me the golden peacock throne does not merit that much-
a flood of memories lash at my banks
they are all sweet melodies to me on this day-
o my child,i cannot see you as a mother of a child
you are in my arms still as an infant
and my eyes refuse to see the outer growth
but ever implants my dear kid 's face they cannot erase !
long live my child, my baby ,my kid-
a blessing rooted deep in my heart
sends its blessing branches to your abode!
 
-----chandra kalaadhar
  

--
வாழ்க நீ மகளே !
&
அவள் என் மகள்-
ப்ரிய ரூபமானவள்  
என் விழிகளில் அழகானவள்
அன்பானவள் சொல் துடிப்பானவள்
செயலில் அணில் ஆனவள்
துன்பப் புயல் பார்த்தவள்
எனைக் கரை சேர்த்தவள்
என் விழி நீரானவள்
என் புவி மையம் ஆனவள்
மௌனங்களில் நான் பேசுவேன்
அவள் குரல் ஏங்கித் தடுமாறுவேன்
அவள் விரல்களில் 
சிலை விளையாடிடும்  
என்னுள் கவிதை ஆனவள் 
என் கவிதை படிக்காதவள்
அழகு மகன் ஈன்றவள் 
அன்பு இல்லம் சேர்ந்தவள் 
குடியரசு நாள் பிறந்தவள்  
என் நெஞ்சில் குடிகொண்டவள் 
வாழ்க   நீ தாயே வளமாகவே !
நெஞ்சார வாழ்த்துவேன் தந்தை நானே !
 
 
-----சந்திர கலாதர்    

Tuesday, January 24, 2012

i am greatly perplexed

i am greatly perplexed
 
&
 
i am greatly perplexed-
the unbearable burden is squarely on my head 
crushing me into smithereens-
it was accumulation madness in youth
receiving gifts in plenty , all in repetitions-
most glittering but utterly useless-
my purse then was bottomless
my desires soaring endless heights
and proud of my vanity acquisitions-
at the exit gate of my life
all shout at me clamouring protection
from the closed boxes' stifling darkness
never once breathing fresh air in years-
of what  use were they for me
except to occupy entire lofts ?
o how to dispose of these worthless stuffs
with no place even to display their empty glitter ?
time runs out with the knock of death getting louder
the gifts outliving their utility and unexciting the gen-next-
i spend sleepless nights ,waking up with bulging eyes
o god ! no more gifts to slaughter my sleep !
kind hearts ! relieve me of my distress lest i kill myself !
 
---s.chandra kalaadhar 

Monday, January 23, 2012


வெண்தாடி என்பது கனிவின் களமா ?
அச்சுறுத்தும் அடையாளச் சின்னமா ?
என் மகளின் மகன் அவன்--
ஒன்றைத் தாண்டிய அழகிய குழந்தை
"கண்ணா !வாய்யா !"-- மிக ஆசையாய் அழைக்க
... அப்பிஞ்சு முகத்தில்தான் எத்தனை எத்தனை
பயத்தின் முட்கள் ! பீதியின் வெள்ளம் !
மகளை நோக்கி அழுகையில் ஓட்டம் !
மறைந்து ஒளிந்து சட்டெனத் தலை காட்டி
"ஹா!ஹூ!" என்று சப்தங்கள் செய்து
தின்பண்டம் சில கையிலே திணித்து
ஒவ்வொரு முள்ளாய் வலியாது அகற்றி
கன்னம் இரண்டில் புலர் வான் பெருக்கி
விழிகள் இரண்டில் நம்பிக்கை மலர்த்து
கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து அணுகி
அவன் பூப் பாதம் பற்றிக் கண்களில் ஒற்றினேன் -
கவனமாய்த்தான் கரம்தனைக் கேட்டேன் ;
மெத்துக் கரங்களில் முள் முத்தம் பட்டிட
விடுக்கெனச் சுண்டி தன்கை மறைத்தனன் !

----சந்திர கலாதர்

Wednesday, January 18, 2012

gitanjali-7
&
my song has put off her adornments.
she has no pride of dress and decoration.
ornaments would mar our union;
they would come between thee and me;
their jingling would drown thy whispers.
my poet's vanity dies in shame before thy sight.
o master poet, i have sat down at thy feet .
only let me make my life simple and straight,
like a flute of a reed for thee to fill with music.
--rabindranath tagore 
&
எனது கீதங்கள் அணிகலன்கள் அகற்றி விட்டன-
அலங்காரம்..மிளிர் ஆடை கர்வங்களும் அவளுக்கு இல்லை -
நம் இணைதலை நகைகள் தடை செய்யும்-
உனக்கும் எனக்கும் இடையில் புகுந்துகொள்ளும் -
அவற்றின் கிணுகிணுப்பு  நம் பூமொழிகளை மூழ்கடிக்கும் !
உன் பார்வையில் எனது 'கவிஞன் மமதை 'வெட்கி மாள்கிறது -
ஓ! தலைமைக் கவிஞனே !
உன் பாதங்களில் அமர்ந்திருக்கிறேன் -
நீ இசையால் நிரப்புவதற்காக
ஒரு வேய்ங்குழல்போல் என் வாழ்வை 
எளிமையாய் நேராய்  நான் செம்மை செய்வேனாகுக !
 &
----தமிழ் ஆக்கம் 
சந்திர  கலாதர்        

Sunday, January 1, 2012

2011-ன் விடைபெறல் நொடிகள்

2011-ன் விடைபெறல் நொடிகள்
&
31.01.2011..சனிக்கிழமை
மார்கழி -15.
என் வான அழகைக் காண வருடத்தின் அந்திம வேளையில் திறந்த மாடி செல்கிறேன் -
விடைபெற , விடை கொடுத்திட ஒரு துடிப்பாய் வானில் விழிக்குதிரைகளின் குளம்பு இசைக்கிறேன் ;
என் மனமும் வானமும் ஏன் ஒரே மௌனமாய் ?
இன்று எனக்கு அருள் இல்லையோ ?
அழகு வரிகளின் அன்பு சொல்லாட்டுக்கள் கிடையாதோ ?
மாடிச் சதுரத்துள் வட்டங்கள் எத்தனை வரைவது என் பாதங்கள் ?
எதுவும் ஏன் இன்று பேச மறுத்து ..நெஞ்சைக் கனமாக்குகின்றன?
சோர்ந்து தவிக்கையில்..." மகனே ! வெறும் கையினனாய் என்று சென்றிருக்கிறாய் ,சொல் ?
வான் நடையில் இந்தக் கோடித் திட்டு மேகங்களின் வியூகம் நீ காண்கிலையோ ?
இன்று கவிதை வரிகளின் வர்ஷங்கள் இல்லை ..ஆனால் மேகத்தின் அணிவகுப்பை எழுது ! "--
என வான் குரல் மென்மையாய் எனை அழைத்தது ,
சடசட எனத் தரை இறங்கி படப் பெட்டி ஏந்தி ஆசை ஆசையாய் அதன் மடி இறக்கினேன் .
இயற்கை என்றும் எனை ஏமாற்றாது !
அந்தி வேளையில் என் சூரிய நாயகனை மேலைச் சரிவில் ஆண்டின் இறுதி மாலை நொடிகளில்
காணாத சோகம் மட்டும் என்னை அகலாது !
' தானே ' புயல் என் ஆதவனை இன்று விழுங்கி விட்டது , என் செய்வேன் .
--சந்திர கலாதர்
--
  1.