Sunday, November 4, 2012

தென் திசை பார்த்து நின்றாள்

வான் பார்த்த மாடம் மீது--

முகமோ கீழ்த்திசை திரும்பிற்று
...
அடர் கூந்தலோ தோள் வழி

மேற்கு சரிய இறங்கிற்று

வலக்கையில் ஒரு சீப்பு ஏந்தி

வழிசிகை இடக்கை உட்பிடித்து

பொன்னேர் ஒட்டுதல்போல்

தலை நிலத்தை

உழுகிறாள் உழுகிறாள்

உச்சி முதல் நுனி வரை

சலியாது சளைக்காது

ஒய்யார நிலைப்பாட்டில்

முதுகு இப்பக்கமாய்

ஓர் மணி நேரமாய் --

தலை மேடெல்லாம்

ஆழக் கோடுகள்

வாய்க்கால் போட்டிருக்குமோ ?

இன்னமும் திருப்தியில்லை

என்று முடிப்பாளோ ?

பொறுமையின் எல்லையில்

பொருந்தாத நான் !

ஒரு வழியாய் அப்பாடா ---

ஆனால் கூந்தல் கூட்டி

தன் பின்புறம் மிடுக்காய் வீசியவள்

அரைமணி நேரம்

அன்பாய்க் கோதி விட்டாள்

கூந்தல் சங்கு இறுக்கி

சிலமுறை அடித்துக் கொண்டாள் .

முகம் வானம் பார்க்க

கூந்தல் திரட்டிப் பரப்பிக்

காதுமடல் உள்ளனுப்பிப்

பின் நுனி கோதி----.

இருட்டி விட்டது

இவள் எப்போதுதான் அதற்கு

மூன்று கால் தருவாளோ ?

முடுக்கிச் சடை காண்பாளோ ?

---சந்திர கலாதர்

04.11.2012 /ஞாயிறு / ஐப்பசி 19

மாலை 6 மணி .
இவர் கடவுள் அல்லர்

ஆனால் மனிதரும் அல்லர்

கண்களில் அத்தனை கனிவு

...
தாயோ எனின் தாயும் அல்லர்

இவரை நேரில் பார்த்தவன் நான்

அருகில் வியந்தபடி

காஞ்சியில் நடந்தவன் நான்

வேறு எவரும் துறவிகளில்

இவர்போல் ஈர்த்தவர் இல்லை

மெல்லிய சொல் மென் பார்வை

நலிந்த மேனி கனிந்த நடை

புத்தகங்கள் சொல்லும்

இவர்தம் முக்கால சக்திகள்

நான் அறியாததால் ஏற்பதில்லை

இவர் பார்வை படருகையில்

ஓர் நொடி உரசிச் சென்றிடினும் --

அது விடுங்கள் -

இவர் நிழற்படம் பார்த்ததுமே

ஒரு காரணமும் புரியாமல்

கண்கள் உருகிக்

கண்ணீர் திரளுதம்மா !

நம் வஞ்சம் கள்ளம் எல்லாம்

பின்கதவு பார்க்கிறதே !

முன் வாயிலில் அடக்கமாய்

பண்பு குனிந்து வருகிறதே !

மெத்தப் படித்த மதாதிபதிகள்

விழிகளில் விளைகின்ற கர்வம்

இவர் கண்ணுள்ளே காண்பதில்லை

இவர் சொற்களிலும் எளிமை

ஒரு தாயின் அன்புச் சாரல்

இவர் ஒரு குழந்தைத் துறவி

ஒரு துறவிக் குழந்தை !

எண்சாண் கிடையாகப்

பாதம் பணிகின்றேன்!



---சந்திர கலாதர்

04.11.2012

ஞாயிறு /பிற்பகல் 3 மணி

ஐப்பசி 19
--
S.CHANDRA KALAADHAR
See more

Friday, October 19, 2012

the song of the rain

the song of the rain .
&
i was born pure at the heights of the skies
became soily as i planted passionate kisses on earth
painful though ,but to become the life sustaining force
causing the green carpet of life dance in glee everywhere.
yes ..it is blessed to be soiled for the sake of others' joy.

----s.chandra kalaadhar

Friday, October 12, 2012

all attention to nature

even the faintest invitations of the tiny blades of grass are audible to me
and the weakest chirpings of smallest wings make the finest impact on my ears
the deepest silences of the majestic mountains convey me the loudest messages
and above the din of the roar of the giant waterfalls i trace the most solemn teaching.
-------s.chandra kalaadhar

Tuesday, September 4, 2012

வாலிபம் மனதுள் விளையாடும்
தனிமை விளையாட்டுத்தான்
எத்தனை எத்தனை சலிக்காமல் ஓயாமல்--
பார்க்கும் பெண்ணை எல்லாம்
விழியுள் இழுத்து கைபிடித்து
காற்றிலே நிலவிலே வாரி அணைத்து
காதல் பரவசக் கவிதை மொழி பெய்து
முத்தங்கள் சூடாய் இமைகள் இட்டு
கற்பனைகள் அடைகாத்து காவலிருந்து
காமத்தில் அரவம் என அவள் இறுக்கி
வியர்த்து விறுவிறுத்து தானே திரவமாகி
ஆவியாகி சிறகெடுத்து விண் நுழைந்து
மாயை என்றுகூட நம்ப மறுத்து
மூடிய விழிகளுள் இளமை வாழ்ந்த காலம்
இன்றெங்கே போனதுவோ இறந்ததுவோ ?
இளமைச் சூடிறங்கிப் போனதுமே சடலமானேன்--
கடந்ததுள் மறுபடி நுழைந்தால்
வரிசை வரிசையாய் அந்தப் பெண்கள்
அதே இளமை மிடுக்கும் செருக்குடன் ;
என் மனதுள் அவர்க்கு என்றும் இளமை வரம் ;
நானோ வெண்தாடி நரை திரை மூப்புடனே !
பெண் பித்து ஏறாத ஆண்மனம் உண்டுதானோ ?
காமம் கலவாத காதலும் உண்டுதானோ ?
யுகங்கள் எத்தனை உருண்டாலும் புரண்டாலும்
ஆணின் தவறாத முடியாத தணியாத ஆய்வு
பெண் என்னும் பொன்னான புதிரே !
---சந்திர கலாதர்

Monday, August 27, 2012

i could see billions upon billions of stars
scattered thick on the deeps of high heavens
puzzling thoughts and even imagination--
creation's might stuns me speechless ;
i stand far far far below as a worthless speck
wondering who the god might be
that created mammoth spheres of flaming lights
condescending to build my fickle frame
with intricate knots and bends and rivers of blood
and keeping a trillion mysteries inside me--
o god , where would be my place of rest after death
amongst the infinite stars in remotest space?

---s.chandra kalaadhar

Saturday, August 25, 2012

சிறு புல்லாய்ச் சிரிப்பதில் என்ன சுகம் ?
சிறு புள்ளாய்ப் பறப்பதில் என்ன சுகம் ?
ஒரு கூழாங்கல்லாய் நீரோடைதனில்
மயங்கிக் கிடப்பதில் யாது சுகம் ?
பெருமலையாய் நீல வடிவெடுத்து
வான் முட்டிக் கிடப்பதில் யாது சுகம் ?
மணல் சரிவில் அலையாய்ச் சிரித்தேறி
புன்னகைப் பூச்சறுக்கலில் என்ன சுகம் ?
ஒரு குட்டிக் காற்றாய் ஓடி வந்து
இலைகளிடைத் திரிவதில் யாது சுகம் ?
ஒரு புகழும் வேண்டேன் பெயர் வேண்டேன் ;
இந்த சுகங்கள் என்றும் எனைச் சேரின்
அதுவே போதும் மனம் நிறைவேன் !
-----------சந்திர கலாதர்