Tuesday, June 11, 2013

நடராஜனே !
என் மீது நின்று ஆடும்
ஒரு கால் நடம் போதும் !
வலிக்கிறது இடுப்பு
சற்றே இறங்கி நட ராஜனே !
அகில அண்டங்கள் தாங்கும்
உன் சுமை என் எளிய மேனி
எப்படித் தாங்கும் அறிகிலையோ ?
உனக்கோ இது ஆனந்த நடனம் !
கூத்தின் வேகத்தில் கூந்தல் நேர் நிற்க
கச்சை காற்றில் அலை பாய
நாகங்களும் கூடக் களித்தாட
நான் மட்டும் உன் குதிகளில்
வலிகளின் திருகலில் நையவோ ?
வாழ்க்கை நோகுதைய்யா !
உன் ஆனந்தப் பெருக்கினில்
ஒரு துளியேனும் இவ்வாழ்வில்
எனக்கும் தந்து அருள் செய்வாய் !

----சந்திர கலாதர்
11.06.2013 / செவ்வாய் / வைகாசி 28
காலை 5 மணி /விஜய ஆண்டு


Thursday, May 2, 2013

may be he is thirty-five years old
he is dressed in crumpled boyish shorts
and a loosely hanging crease-less shirt
with the upper chest carelessly open
and his unkempt tress foolishly cut
bulging unclean eyes and pouting lips
with ungainly steps of his knotted knees
protruding teeth and a swelling belly --
with a small vessel in one hand
emitting a loud fitful laughter
all his way to the tea-shop --
he harms none ,talks with none
but who ignites his laughter sparks ?
seems immensely blissful
as he heartily laughs , caring not
this earth and our minds he treads on !
he cannot speak but a few words
that too with a pathetic stammer--
he sits at the gate of my apartment
cross-legged like a hapless school boy
witnessing the world as it hurries past him -
time does not perturb or disturb him
from morn to midday , scorching the sun !
a sympathetic call of a passer-by
meets with the never-changing complaint
'he beats me ..he throws stone at me !'
and he is satisfied with
' worry not ,I will punish him !'
and he wears the day and everyday --
even a kid smells his unsoundness of mind
and jeer at him as they pass by --
I see him for the past twelve years in my street
I am told that he was married to a girl
who ran away once for all leaving him on the roads - 
o god , why this defective creation ?
why this half-hearted attempt ?
he has a younger sister who is still worse
and another sister suffering from polio
I pity their hapless mother
who takes her daughter along the streets
twice a day shrinking her soul in utter shame -
could there be anyone suffering more fate ?
the world rolls on its circular brim
casting never a look on this pitiable mother !
--
S.CHANDRA KALAADHAR
02.05.2013 / Thursday / chiththirai-21 / 9 p.m.

Monday, April 15, 2013

கவிதை என்னுள் இளம் வயதில்
எட்டாத தொலைவில் மறைவாய் நின்று
மெலிதாய் 'வா வா ' என்று அழைத்ததோ ?
பசிய மண்ணும் நெடிய விசும்பும்
காற்றும் மழையும் மரமும் புள்ளும்
நானே அறியாது தோழமை கொண்டவோ ?
வாலிப வயதில் முச்சந்தியில் முட்ட
படிப்பு , ஓவியம் ,கவிதை கைகாட்டிகள்
பாவம் என்னை வெகுவாய்க் குழப்பின -
படிப்பைத் தேர்ந்தேன் ஒருவாறு முடித்தேன்
விடாது தொடர்ந்தனள் ஓவியப் பெண்ணாள்
அவள் மையலில் வீழ்ந்தேன்
மடியில் கிடந்தேன் கனவுகள் பொரித்தேன்
காகிதம் சுவர் என வண்ணத்துள் திளைத்தேன்
ஓவியம் காதலில் களைத்தாள்
கவிதையாள் குரல் நெருக்கமாய்க் கேட்டது
அவள் இலக்கண நகை கண் கூசியது
நகைதனை நீக்கி நகையோடு வா என்றேன்
அப்போதுதான் அவள் முழு நிலவானாள்
உன் அழகு நான் இல்லை, எப்படி என்றேன் ?
தரிசாய்க் கிடக்குதே என் மனம் என்றேன்
எங்கிருந்தோ ஏதோ என்முன் குவித்தாள்
கூர் முனை ஏர்களாய் உலகக் காவியங்கள்
பட்ட நிலத்தை பொன் ஏர்களால் கீறினேன்
உயரிய கருத்தை உரமாய் இட்டேன்
கற்பனை கொண்டு ஈரப் படுத்தினேன்
உண்மையை தேடி விதைகளாய் இட்டேன்
நம்பினால் நம்புங்கள் இது சத்தியம் ஆகும்
முதல் ஓர் கவிதை கோர்க்கும் முன்பு
ஓர் பத்தாண்டுக் காலம் ஓராயிரம் நூல்கள்
ஓர்ந்து படித்தேன் மகிழ்ந்து கற்றேன் .
ஓர் கவிதையும் கூட பிறர் படைத்தன
மிஞ்சாது போயினும் தாழாது என்ற உறுதியில்
ஒவ்வொன்றாய் என் படைப்புகள் கண்டேன்
நானே இலக்கணம் மீறிய படைப்பு என்பதால்
உணர்வை முன்வைத்தே கோலங்கள் எழுதினேன்
அழுதேன் சிரித்தேன் கலங்கினேன் குழம்பினேன்
வெற்றுக் கூச்சல் வெகுவாய் வெறுத்தேன்
கொஞ்சம் கொஞ்சமாய் குவிந்தன எழுத்துக்கள்
ஒன்று இரண்டு நூல்களும் ஆயின
நொண்டிக் கால்களைக் கடன் கேட்கவில்லை
என்னுரை மட்டுமே என்னோடு நடந்தது
உள் ஆசை ஒன்று தீயைக் கனன்றது
இவன் கவிஞன் என்று பிறிதோர் கவிஞன்
குறிப்பிடக் கேட்கக் கொள்ளாத ஆசை
பாவலன் என்றும் சொல்லக் கேட்டேன்
இருப்பினும் என் ஆங்கிலப் படைப்பை
ஒரு ஆங்கிலக் கவி மெச்சக் கேட்க
தணியாத தாகம் ; பொல்லாத ஆசைதான் !
ஓ ஓ ! அவையும் மெதுவாய் என் கரை சேர்ந்தது
'sweet poet ! brilliant poet !' என்பன எல்லாம்
என் கவிதைக் காதலின் பரிசெனக் கொள்வேன் .
ஆம் ,இதனை அடைய எத்தனை தூரம்
தளரா நடை தனி வழி சென்றேன் !
&
ஒன்றை மட்டும் நினைவில் செதுக்கினேன்
இது இயற்கை அளித்த பிச்சை ஆகும்
என் திறம் என்பது எதுவும் இல்லை !
கவிதை என்பது காற்றாய் வருவது
பலூனுள் ஊதி அடைப்பது அல்ல !
---சந்திர கலாதர்
15.04.2013 / திங்கள் / சித்திரை 2 / விஜய
இரவு மணி 11.

Sunday, April 14, 2013

the four walls wrap me tight
loneliness burns my mind
darkness drenches
sweats of dejection
sink my soul
void fills my thoughts --
no more no longer ;
must i escape into the vast space
meet my clouds
and have fun with the winds
the evening has risen
the sun has yellowed and mellowed
from heaven and earth .
i must read my message !
o mind ,gain your wings
and shatter the doors
with a powerful bang --
the call is strong
and feverish is its pitch !
--
S.CHANDRA KALAADHAR
15.04.2013 / monday
03.a.m./vijaya /chiththirai 2

Wednesday, February 20, 2013

in hot pursuit of my sweet sparrow !
&
my handy cam was restless and hungry
smacking its lips for the choicy nature dishes--
the pinch was too much to bear
and i set out my journey to bangaluru
from the cursed chennai devoid of cute little birds
to the blessed bangaluru's cool climes
where thrive all sweet songsters
in their joyful flights in the sporting winds !
who marks the microwave towers
as the villain of peace that drove mercilessly
the ever agile and ever brisk house sparrows ?
then how can it thrive and flourish in gleeful gangs
in bangaluru where towers outwit even the crafty crows ?
could there then be a curse on the cauldron chennai ?
must be the perennial pricks from the sea of crows ?
two happy days in the serene skies of bangaluru !
and my handy cam was overfed with the juicy nature !
bangaluru is a bird-heaven
the sky is decorated with the formations of
the disciplined flights of cranes and storks --
o what a treat to watch the young skies
with wave after wave of these wonder birds
weaving delectable ever-changing patterns
that raise 'aahaa's in your heart !
can a flight itself be a melody or music ?
yes, yes , it can be to the whole body and soul !
and the graceful raiding flights with alert looks of
the urban kites and vultures in their broad powerful wings
circling the heavens at majestic heights
with delicate manoeuvring of their tails and wing tips !
the tiny sparrows in small bands
with the black-banded males calling sweet names
of their beloveds in ' chweet- chweet ' language,
restless to park their spirits at a spot not more a second !
i am the heaven's blessed soul
to have the birds amidst me
in their happy flights of unbridled freedom
serenading their songs in total abandon
all for me and for me alone !
strange birds present themselves in their full glory
for a fleeting moment to surprise and gladden me !
i am not the mindless man
to cage the tiny hearts with their bursting melodies
to crash their hearts in painful cries
slamming their chests against the rock- hearts
that cage their songful-spirits for their vulgar joys !
o my loving birds , soar high and higher up in skies
criss-cross the heavens in brilliant colours
and pour out your souls on this hungry heart
and feed with the splendour my ever-hungry cam !
---s.chandra kalaadhar
20.02.2013 / wednesday / maasi 8 / 12 noon

Monday, January 14, 2013



why should it happen ..?

&

why should it happen like this ?

why should there be such a rush

of unstoppable streams

of thoughts and fancies

into me and out of my core ?

why am i drifting away from close ones

and closing in on others and strangers?

which tide tosses me into realms unfamiliar ?

why mysterious sounds and strange silences

encircle me sucking me in their vortex

and ejecting me out with powerful kicks ?

why is my soul visited by holy spirits

in such a quick succession

spraying me with the fragrance of heavens ?

in which powerful energy's inescapable swirl

have i been caught and entangled ?

my thousand voices rise in waves

crying loud for merciful looks !

o god , it is your matchless boon-

the unending shower of thoughts-

that keep my spirits alive and high !

dispel my fear that soon

you may suck me dry and throw me lifeless

in an unfriendly desert !

o merciful it is my desire

i should die a poet

breathing out my last poem

in honour of the 'nature '!


---s.chandra kalaadhar

14.01.2013 /monday / thai 1 / 10 p.m.
See more

Tuesday, January 1, 2013

காற்றே நீ தான் ...!


 &

நிலம் நீரால் துண்டிக்கபடுகிறது
...
காற்றே நீதான்

எவற்றாலும் துண்டிக்கப் படவில்லை

உலகெங்கும் வானெங்கும்

எப்போதும் சுற்றித் திரிகிறாய் -

உன்னை நான் என்னுள் உயிர்க்கையில்

எங்கோ என்னவளின் உள்ளிழுப்பே

நெஞ்செல்லாம் நிறைக்கிறது-

அவளைத் தொட்ட நீயே

இதோ என்னையும் தழுவுகிறாய் -

அவள் மொழிகளைக் காதில்

காதலாய்க் கிசுகிசுக்கிறாய் --

ஒரு கரம் என் மீதும்

மறு கரம் அவள் மீதுமாய்

ஆதரவாய்ப் படர்கிறாய் --

அவள் உணர்வின் நறுமணம்

உன் சிறகில் எனை நிரப்புகிறது -

உன் மெல்லிய நரம்பிழைகளிலும்

அவளுக்காக இசை வருடுகிறேன்--

என் நெஞ்சு கனவுகளால் கனக்கிறதே

அவளிடம் உன்னால் சுமக்கக் கூடுமா ?

காற்றே உன்னைகூட இன்று

உருவாய்ப் பார்க்க முடிகிறதே -

அவள் பார்வை ஒளி படர்ந்து

நீ சந்திர காந்தம் பெறுகிறாயே !

---சந்திர கலாதர்

02.01.2013 / புதன் / மார்கழி 18

காலை 9.30 மணி